India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுந்தந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வாய்த்த பிறகு துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனத்தால் ‘ஏ’ பிளஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார் அவர்.
முத்துப்பேட்டை காவல் நிலைய நீதிமன்ற காவலர் இளஞ்செழியன் நீதிமன்ற காவல் பணியை சிறப்பாக செய்ததற்காக இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாரூ ஸ்ரீ பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். ஆண்டுதோறும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சுதந்திர தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கமாகும்.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் நகராட்சி தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையி்ல், 78வது சுதந்திர தினத்தில் திருவாரூர் நகராட்சிக்கு சிறப்பு விருதினை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் வழங்கினார். இதன் பின்னர், இவ்விருதினை பெற பெரும் பங்காற்றிய அனைத்து நகர மன்ற உறுப்பினர்களுக்கு நகர்மன்ற தலைவி புவனப்பிரியா செந்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு, சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் தமிழ்புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கான மின்னனு அட்டையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், உத்தரவின் படி 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படை பிரிவினர் இன்று (14.08.2024) பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்திய நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர்கள் மும்மரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. SHARE NOW!
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட்.14) திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், போதை பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
Sorry, no posts matched your criteria.