Thiruvarur

News August 28, 2024

முதலமைச்சரை அமெரிக்காவில் வரவேற்ற அமைச்சர்

image

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு முறை பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சரும், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி ஆர் பி ராஜா அமெரிக்காவில் இன்று மலர்மாலை கொடுத்து வரவேற்றார்.

News August 28, 2024

திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய உள்ளோம். 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 99658 60996, 82200 49077, 97917 31249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News August 28, 2024

முத்துப்பேட்டையில் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

image

நடமாடும் கால்நடை அவசர ஊர்தி வாகன சேவையை இன்று முத்துப்பேட்டை ஒன்றியம் ஓவரூர், வெள்ளாங்கால் பகுதியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து, விவசாய சங்க பொறுப்பாளர் கே. முருகையன், திருவாரூர் இணை இயக்குனர், மன்னார்குடி இணை இயக்குனர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News August 28, 2024

பேரளம் அருகே செல்போன் வாங்கி தராததால் சிறுவன் தற்கொலை

image

பேரளம் அருகே உள்ள திருமீயச்சூரை சேர்ந்தவர் ராதிகா. இவரது மகன் அய்யப்பன். இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அய்யப்பன் தனது தாயாரிடம் செல்போன் கேட்டுள்ளார். இதற்கு ராதிகா தன்னிடம் இப்போது பணம் இல்லை பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 28, 2024

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. வேளாண்மை சார்ந்த துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க உள்ளனர். முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டிருக்கிறார்.

News August 28, 2024

பாதயாத்திரை செல்வோருக்கு ஸ்டிக்கர் ஒட்டிய எஸ்.பி

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று (ஆகஸ்ட் 27) கானூர் சோதனை சாவடி வழியாக வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் ஆடைகளில் இரவில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியும் தூக்கம் மற்றும் அதிக கலைப்புடன் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து ஓய்வு எடுத்து செல்லும்படி அறிவுரை கூறினார்.

News August 27, 2024

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆகஸ்ட் 27 இன்று முத்துப்பேட்டையில் நடைபெறும் விநாயகர் ஊர்வல சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 27, 2024

திருவாரூரில் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி

image

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஐந்து ஆம்புலன்ஸ் சேவைகளை தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த கால்நடை மருத்துவ வாகனத்தை பார்வையிட்டார். திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உடன் இருந்தார்.

News August 27, 2024

விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்ட அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு கடைசி தேதி 2/9/2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கு http://sdat.in/cmtrophy/player-login/ எனும் முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

News August 27, 2024

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 01/01/2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக வரும் 31/01/2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!