Thiruvallur

News January 20, 2025

சட்ட விரோதமாக மணல் கடத்திய இருவர் கைது

image

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணலை பதிவு இல்லாத டிராக்டருடன் கூடிய ட்ரெய்லரில் சட்ட விரோதமாக ஏற்றி வந்த இரு நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மணலுடன் கூடிய வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது பாதிரிவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

News January 19, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 19, 2025

கணவன் கண் முன்னே மனைவி பலி

image

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் பிரகலநாதன்(50) இவரது மனைவி முருவம்மாள்(45), இவர்களுக்கு  இருவரும் பைக்கில் சின்ன போரூர் சென்று கொண்டிருந்தனர். திருமழிசை கூட்டு சாலை அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் முருவம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 19, 2025

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

image

கடம்பத்தூர் கசவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் திவாகரன் (41). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த திவாகரன் தன் அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2025

கல்வி கூடங்களில் கம்பர் பேச்சு போட்டி அறிவிப்பு

image

தமிழக பள்ளி, கல்லுாரிகளில், கம்ப நாட்டாழ்வாரின் ராமவதாரம் என்ற காவியத்தில் பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிமாணவர்கள் ‘நடையில் நின்றுயர் நாயகன்’அல்லது ‘கம்பர் காட்டும் அன்பும் அறனும்’ ஆகிய தலைப்புகளில் எட்டு நிமிடங்கள் பேச வேண்டும். இப்போட்டி ஜன 28ம் தேதி பாரதிய வித்யா பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலை என்ற முகவரில் நடக்கிறது.

News January 19, 2025

திருவள்ளூரில் வெளுத்து வாங்கும் கனமழை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, தாமரைப்பக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்றும் (ஜன.19) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரியாக இருங்கள்.

News January 18, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 18, 2025

திருத்தணி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம் திருட்டு 

image

திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் சுவற்றை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த பீர் பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடி சென்றதாக டாஸ்மார்க் ஊழியர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி கந்தன் மற்றும்  இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  

News January 18, 2025

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

image

திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் ஜெயபாரதி (45). பொங்கல் விழாவை கொண்டாட ஜெயபாரதி குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 8½ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

News January 18, 2025

ஆர்.கே.பேட்டை அருகே 32பேர் மீது வழக்கு பதிவு

image

ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரம் வருவாய் கிராமம், நரசம்பேட்டை கிராமத்தை சார்ந்தவர் வினோத். இவருடைய தாயாருக்கு சொந்தமான சொத்து தொடர்பாக ஏற்கனவே வருவாய் கோட்டாட்சியத்தில் விசாரணை உள்ள நிலையில், அந்த இடத்தை அபகரிக்க வந்த 32பேர் மீது வழக்கறிஞர் வினோத் கொடுத்த புகாரில் அடிப்படையில், ஆர்கே பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!