Thiruvallur

News November 22, 2024

திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காணலாம். இக்கூட்டத்தில் அனைத்து விவசாய பெருமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

News November 22, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது, நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

திருவள்ளூரில் புதிய டைடல் பார்க்; முதல்வர் திறந்து வைத்தார்

image

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.6000 பேர் பணிபுரியும் வகையில் பசுமை கட்டிடமாக இந்த டைடல் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

திருவள்ளூர் அருகே இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்

image

திருவள்ளூர் அருகே உள்ளது கன்னிகாபுரம் ஊராட்சி. கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து கிரிநாத், பிரவீன் என்ற 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்த கிரிநாத், பிரவீன் ஆகிய இரு சிறுவர்களின் உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 22, 2024

திருவள்ளூரில் புதிய டைடல் பூங்கா; முதல்வர் திறந்து வைப்பு

image

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.11.2024) திறந்து வைக்கிறார். டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

News November 21, 2024

இரவு ரோந்து பணியில் அதிகாரிகளின் விவரம் வெளியீடு

image

திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 21, 2024

பயிர் காப்பீடு செய்ய 30ஆம் தேதி வரை அவகாசம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

image

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நபர்களுக்கு மூன்று சென்ட் இடம் அளவீடு செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த100கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

News November 21, 2024

திருவள்ளூர் அருகே வடிகஞ்சி கொட்டியதில் சிறுமி மரணம்

image

கும்மிடிப்பூண்டியில் அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிதாஸ்.இவருடைய 16 வயது மகள் நந்தினி கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சோற்றை வடிக்கும் போது கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடலில் கொட்டியது. படுகாயமடைந்த நந்தினியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று மரணமடைந்தார்.

News November 21, 2024

திருவள்ளூர் அருகே போலீசார் தடியடி; டி.டி.வி கண்டனம்

image

அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,கோலடி ஏரியை ஆக்கிரமித்திருப்பதாக கூறி ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதில், மனமுடைந்த தச்சுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என்றார்.

error: Content is protected !!