India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <
திருத்தணி கமலா தியேட்டர் அருகே, 45 வயது மதிக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு உயர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரது அடையாளம் தெரியாததால் காவல்துறை விசாரித்து வருகின்றது.
ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
1.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்,
2.ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணியசுவாமி கோயில்,
3.சிறுவாபுரி முருகன் கோயில்,
4.சென்னீர்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயில்,
5.சென்னை வடதிருச்செந்தூர் முருகன் கோயில்,
6.மணவூர் கிராமம் சுப்பிரமணியசுவாமி கோயில். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருக்கோவிலில் சிவபெருமான் தனது தோஷம் நீங்க பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தீராத நோயால் வருந்துபவர்கள். இத்தலத்தில் ஒன்பது கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும், தோஷங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி Yoga Instructor வேலைக்கு மொத்தமாக 36 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளனர். கல்வித்தகுதியான இளங்கலை படித்தவர்கள் இந்த <
திருத்தணி, கே.ஜி.கண்டிகை சிவன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் குறித்த தகவல் கிடைக்காததால் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இணைய மோசடிகாரர்கள் சமூக ஊடக கணக்குகளில் தள்ளுபடியில் IPL டிக்கெட்டுகள் வைத்திருப்பதாகக் கூறி, QR லிங்க் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்கிறார். எனவே தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். QR குறியீடுகள் மூலம் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை பதிவு செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.