India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் திருத்தணி முருகன் கோவிலில் 23 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 18- 45 வயது உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://hrce.tn.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் 05.11.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் டிமான் சந்திராதாஸ்(30). கும்மிடிப்பூண்டி காந்தி நகரில் சாய்பாபா கோவில் எதிரே வாடகை அறையில் தங்கி பெயின்டிங் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர்கூர்மையான ஆயுதத்தால் மார்பில் குத்துப்பட்டு இறந்து கிடந்தார். அருகில் அவரது நண்பர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கார்த்திலால் ஹரிஜன்(30), என்பவர் வசித்து வருகிறார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், மோசஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் 10,000 அபராதம் விதிக்கப்பட்டடது. மேலும் சிறுமிக்கு 3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவு.

திருவள்ளூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <

திருவள்ளூர் மாவட்ட DRDA கூட்டரங்கில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை 2025 முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமுநாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், எம்.பி சசிகாந்த்செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (09.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அவசர தேவைகளில் தொடர்பு கொள்ள தேவையான போலீஸ் பணியாளர்களின் விவரங்களை பெறலாம், பாதுகாப்பும் எச்சரிக்கையும் உறுதி செய்யப்படுகின்றது.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://tnhorticulture tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) ஆதாரில் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.