Thiruvallur

News June 12, 2024

திருவள்ளூர்: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

image

திருவள்ளூர் அருகே நேமம் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் (55). இவர் கைவண்டூர் கிராமத்தில் உள்ள 1200 சதுரடி மனையை வரன்முறைப்படுத்த பூண்டி பி.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதனை செய்து கொடுக்க அரசு உதவியாளர் விஜயகுமார் (45) ரூ.5 ஆயிரம் லஞ்சப் பணத்தை சுனில்குமாரிடம் இருந்து இன்று வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

News June 12, 2024

பொன்னேரியில் மின்வெட்டு: கொதித்தெழுந்த மக்கள்

image

பொன்னேரி அருகே வேண்பாக்கத்தில் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இரவு நேரம் ஆகியும் மின்சாரம் வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தி, மின்சாரம் சப்ளை செய்வதாக கூறிய பிறகு, பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

News June 12, 2024

மணல் கொள்ளை: நீர்மட்டம் குறையும் அபாயம்

image

திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் பாகசாலை லக்ஷ்மி விலாசபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாட்டுவண்டி, இருசக்கர வாகனங்களில் மணல் கொள்ளை நடப்பதால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடம் மாறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக மணல் கொள்ளை அதிகரித்துவருகிறது. இது குறித்து திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News June 12, 2024

திருவள்ளூர்: குடியிருப்பு கட்டி தருவதாக மோசடி

image

பூந்தமல்லி, லட்சுமி நகரில் திரைப்பட இயக்குநர் கண்ணன் (54) என்பவருக்கு சொந்தமான 1038 சதுரடி நிலத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.14 லட்சம் பணம் கொடுப்பதாகக் கூறி அவரது மைத்துனர் சென்னையை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகார்த்தி (43) என்பவர் ஏமாற்றியுள்ளார். புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த ஜெய கார்த்தியை நேற்றிரவு கைது செய்தனர்.

News June 11, 2024

திருவள்ளூர்: கஞ்சா விற்ற நபருக்கு 12 ஆண்டுகள் சிறை

image

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற சென்னை காமராஜர் சாலையைச் சேர்ந்த ஆறுமுகம்(47) என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் விசாரணை நடத்தி, ஆறுமுகத்திற்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

News June 11, 2024

திருவள்ளூர்: குறைதீர் முகாமில் 333 மனுக்கள் அளிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 333 மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்த மனுக்கள் குறித்து தீர்வு காண துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா, கோட்டாட்சியர் கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

திருவள்ளூர்: இங்கு மின்தடை அறிவிப்பு

image

திருத்தணி கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள்: நெட்டேரி கண்டிகை, கிருஷ்ணசமுத்திரம், இஸ்லாம் நகர், ஆர்.வி.என்.கண்டிகை, புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

News June 10, 2024

பழங்குடியினர் மாணவர்களுக்கு சீருடை வழங்கி எஸ்பி

image

திருத்தணி அருகே காஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் பழங்குடியின மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் நோட்டு, புத்தகம், பேனா மற்றும் சீருடை ஆகியவற்றை வழங்கினார். உடன் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன், K.K.C. சிறப்பு உதவியாளர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் செய்திருந்தனர்.

News June 10, 2024

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

image

பொன்னேரி அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவமனையில் ஜெனரேட்டர் முறையாக செயல்படாததால் மின்தடை நேரத்தில் பிரசவ வார்டுகளில் உள்ள குழந்தைகள், தாய்மார்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

News June 10, 2024

ஆதார் சிறப்பு முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

image

இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூரில் உள்ள R.M.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப்‌ பள்ளியில் தமிழக அரசின் அரசுப் பள்ளியிலேயே  ஆதார் சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஐஏஎஸ் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!