India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகள், அயப்பாக்கம், ஊத்துக்கோட்டை பகுதிகள், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தொழிற்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில், இன்று(ஜூலை 18) லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அதில் 2 டன் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், வட மாநிலத்தைச் சேர்ந்த ராஜலிங்கம், லிங்கதுரை, தமிழ் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
திருவள்ளூரில் இன்று(ஜூலை 18) இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இன்று மாலை ஆவடி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், 10 மணி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவேற்காடு அருகே வடநூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயா (58). இன்று காலை இவர் வீட்டிலிருந்து வேலைக்கு வேலப்பன்சாவடி மேம்பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து ஜெயா மீது மோதியதில், சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் ஆனந்தம் (48) என்பவரை கைது செய்தனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 17) இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் போலீசார் இன்று(ஜூலை 17) கைது செய்துள்ளனர். 5 கொலை வழக்குகள் உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவர் 6 மாதமாக தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து, சரித்திர பதிவேடு ரவுடியான சேதுபதியை சிறப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <
Sorry, no posts matched your criteria.