India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன் பேட்டையை சேர்ந்தவர் முரளி (48). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். எனினும் ஷேர் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து வெள்ளவேடு போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்தவர் நாகார்ஜுனா இவருக்கு அயப்பாக்கம் சேர்ந்த விஸ்வ பிரியா என்பவருடன் கடந்த 45 நாட்கள் முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணவருடன் பைக்கில் தாய் வீட்டுக்கு சென்ற போது, கவரப்பேட்டை அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதில் விஸ்வ பிரியா படுகாயம் அடைந்தார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் சிறையில் காவலர்கள் தீடர் சோதனை செய்த போது கைதி ஆடையில் மறைத்து வைத்து இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள இமாரனிடம் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து இமாரனிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
பூந்தமல்லியில் உள்ள ஹோட்டல் ஹைவே நிகழ்ச்சி அரங்கத்தில் இன்று திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் பலத்த கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. காலை 6 மணி முதல இன்று காலை 6 மணி வரை நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 7செ.மீ ஊத்துக்கோட்டை 6 செ.மீ. மழை பதிவானது. கும்மிடிப்பூண்டி 5 செ.மீ தாமரைபக்கத்தில் பகுதியில் 3 செ.மீ. மழை சோழவரத்தில் 2செ.மீ பதிவாகியுள்ளது. பதிவானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
Sorry, no posts matched your criteria.