India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளையும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவ.01 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நவ.23 ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 418 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த Rapido பைக் ஓட்டுநர் சீனிவாசனிடம் அதிகாலையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 வெள்ளி மோதிரங்கள், செல்போன் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாரத எழுத்தறிவுத்திட்டல் எழுத, படிக்க தெரியாத வயதானோர் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளிச்சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 17,500 பேருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று மாவட்டத்தில் 1,042 மையங்களில் நடைபெற்றது. இதில் 17,400 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.