Thiruvallur

News November 19, 2024

திருவள்ளூரில் 419 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மக்களிடம் இருந்து 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News November 18, 2024

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 18, 2024

திருவேற்காட்டில் கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை

image

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அண்மையில் நோட்டீஸ் ஒட்டினர். ஆக்கிரமித்து கட்டிய தனது வீட்டை அதிகாரிகள் இடித்து விடுவார்கள் என்ற சோகத்தில்  தனது வீட்டில் கார்பெண்டர் சங்கர்(40)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருவேற்காடு போலீசார்   விசாரித்து நடத்தி வருகின்றனர்.

News November 18, 2024

மீஞ்சூர் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

News November 18, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் பெற்ற பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் இணைப்பு சக்கர வாகனங்கள் பழுதடைந்திருந்தால், மீண்டும் புதிய வாகனம் பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நவ.22 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

News November 17, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பதிவு நிலவரம்

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருவள்ளுர் 10 மி. மீ, கும்மிடிப்பூண்டி 21 மி. மீ, பொன்னேரி 11 மி. மீ, செங்குன்றம் 5 மி. மீ, பூண்டி 5 மி. மீ, திருவாலங்காடு 10 மி. மீ, திருத்தணி 46 மி. மீ, ஊத்துக்கோட்டை 6 மி. மீ, பூந்தமல்லி 0, சோழவரம் 8 மி. மீ, தாமரைப்பாக்கம் 6 மி. மீ ஆகிய பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

News November 17, 2024

திருவள்ளூர் அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் வியாபாரத்திற்காக ஆவடி வந்தார்.வியாபாரத்தை முடித்து விட்டு திரும்பிய போது,ஆவடி அருகே தண்ணீர்குளம் பகுதியில் உள்ள டெலிபோன் கமபத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. விபத்து நிகழ்ந்த போது ஏர் பேக் திறக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News November 17, 2024

திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம் மார்ச்சில் திறப்பு?

image

திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கர் நிலத்தில், 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையப் பணி கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது.பணிகள் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில்,நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரை பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.இதையடுத்து,40 சதவீத பணிகள் முடிவடைந்தன.வரும் மார்ச் மாதத்தில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 16, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

error: Content is protected !!