Thiruvallur

News November 21, 2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

image

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நபர்களுக்கு மூன்று சென்ட் இடம் அளவீடு செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த100கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

News November 21, 2024

திருவள்ளூர் அருகே வடிகஞ்சி கொட்டியதில் சிறுமி மரணம்

image

கும்மிடிப்பூண்டியில் அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிதாஸ்.இவருடைய 16 வயது மகள் நந்தினி கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சோற்றை வடிக்கும் போது கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடலில் கொட்டியது. படுகாயமடைந்த நந்தினியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று மரணமடைந்தார்.

News November 21, 2024

திருவள்ளூர் அருகே போலீசார் தடியடி; டி.டி.வி கண்டனம்

image

அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,கோலடி ஏரியை ஆக்கிரமித்திருப்பதாக கூறி ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதில், மனமுடைந்த தச்சுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என்றார்.

News November 20, 2024

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 20, 2024

திருவள்ளூர் அருகே பரோட்டா மாஸ்டருக்கு வெட்டு

image

திருவள்ளூர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (38).பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடைக்கு எதிரே டிபன் கடை இருக்கிறது.கடந்த 17-ம் தேதி பால்ராஜ் உறங்கி கொண்டிருந்த போது டிபன் கடை உரிமையாளரின் மகன் தனுஷ், பால்ராஜின் அறை கதவை தட்டினார்.கதவை திறந்தவுடன் தனுஷ் கத்தியால் பால்ராஜ் கழுத்தில் குத்தினார்.இதில் பால்ராஜ் படுகாயமடைந்தார்.புகாரின் பேரில் போலீசார் நேற்று தனுஷை கைது செய்தனர்.

News November 20, 2024

திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலக வளாகத்தில் வரும் நவ.22ம் தேதி காலை10 மணி யளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News November 19, 2024

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 19, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருமுல்லைவாயல் மகளிர் தொழில் பூங்காவில் புதிதாக தொழில் தொடங்க தொழிற்மனைகளை விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in வாங்க இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் இணையதளத்தின் வாயிலாகவே விவரங்களை தெரிந்து கொண்டு தேவையானவற்றை நவ.22-ம் தேதிக்குள்   விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு.

News November 19, 2024

திருவள்ளூரில் 419 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மக்களிடம் இருந்து 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News November 18, 2024

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!