India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் சுய உதவிக் குழுவினர் மதி சிறகுகள் தொழில் மையத்தில் பதிவு செய்து தொழில் தொடங்கி பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மகளிர் உதவிக் குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மக்கள் இந்த சேவைகளைப் பெறலாம்.மேலும் அலைபேசி எண் : 8939009163, 8825769032 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பூண்டி 4 செ.மீ, சோழவரம், தாமரைப்பாக்கம், செங்குன்றம், திருவள்ளூரில் தலா 3 செ.மீ பதிவாகியுள்ளது. பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருவாலங்காடு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் தலா 2 செ.மீ மழையும், திருத்தணி, ஆர்.கே.பேட்டையில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி இடையே புறநகர் மின்சார ரயில் பாதையில் கோளாறு ஏற்பட்டதால் சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்ட ரயில்களால் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சோழவரம் அருகே பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பள்ளிவாசலுக்கு வந்து அரபி பயிலும் சிறுமிகளுக்கு பயிற்சியாளர் முகமது ஆசிப் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பள்ளிவாசல் அரபி ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று மாலை கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மாலை திருத்தணி, ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் மருத்துவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது, செல்போனுக்கு கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் மூலம், ஆபாச படம், குறுஞ்செய்திகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சுரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஆா்.கே.பேட்டை, சின்ன நாகப்பூண்டி காலனியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் கவிப்பேரரசு (11). 6ஆம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றாா். மாலை ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தார். இதில், ஆட்டோவின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாா்.
பூனி மாங்காடு, மாமண்டூர், அத்தி மாஞ்சேரிபேட்டை , கொளத்தூர், பாலாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் கிராமங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருத்தணி கோட்டை செயற் பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
பாலாபுரம் பெரியநாகபூண்டி காலனியை சேர்ந்த கவிப்பேரரசு என்ற மாணவர் எலும்பிச்சை உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.இன்று பள்ளிக்கு சென்று மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தவர். ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிஜேபி பொதுசெயலாளர் முத்துராஜ் பிஜேபியில் இருந்து விலகி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில்
திமுக மாவட்ட நிர்வாகிகள், பொதுச் செயலாளர், கழக உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.