India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அளித்த பேட்டியில், அதிமுகதான் என்றுமே தொடர்ந்து நிலைத்து நிற்கும். 2026 தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவார். புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் விரைவில் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காணலாம். இக்கூட்டத்தில் அனைத்து விவசாய பெருமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது, நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.6000 பேர் பணிபுரியும் வகையில் பசுமை கட்டிடமாக இந்த டைடல் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ளது கன்னிகாபுரம் ஊராட்சி. கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து கிரிநாத், பிரவீன் என்ற 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்த கிரிநாத், பிரவீன் ஆகிய இரு சிறுவர்களின் உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.11.2024) திறந்து வைக்கிறார். டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.