India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தொழில் முனைவோர்கள் வருகிற நவ.30 ஆம் தேதி வரை www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
பாடி மேம்பாலம் அருகே போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தத்தில் அவர்கள் மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பது தெரிந்தது. இதையடுத்து வெங்கடேஷ், கோவர்தனரெட்டி ஆகிய 2 பேரை கைது செய்து புழல் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 64 கிராம் போதைப்பொருள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென புரை ஏறியதால், மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்தது. குருவராக கண்டிகையை சேர்ந்த குழந்தை வெங்கடலட்சுமி தேகலா உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் பிரசவ காலங்களில் பெண்களும், பிரசவித்த பின்பு குழந்தைகளும் உயிரிழக்கும் நிகழ்வுகள் பெரிதும் குறைந்துள்ளது.மாநில அளவில் பிரசவ கால பெண்கள் உயிரிழப்பு மற்றும் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு பெரிதும் குறைக்கப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் உருவெடுத்துள்ளது. குழந்தை இறப்பு மாநில அளவில் 1,000 பிறப்புகளில் 7.7 ஆகவும், திருவள்ளூரில் 5.7 ஆகவும் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (இரு சக்கர வாகனம் ஓட்டும்போது இருவருமே ஹெல்மெட் அணிவது அவசியம் மட்டுமல்ல அது உயிர் காக்கும் கவசமும் கூட..) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அளித்த பேட்டியில், அதிமுகதான் என்றுமே தொடர்ந்து நிலைத்து நிற்கும். 2026 தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவார். புதியதாக கட்சி ஆரம்பித்தவர்கள் விரைவில் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
Sorry, no posts matched your criteria.