Thiruvallur

News September 2, 2024

இரவு ரோந்து பார்க்கும் போலீஸ் பட்டியல் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது. தினமும் வெளியிடப்படும் இப்பட்டியலால் பொதுமக்கள் மிகவும் பயனுள்ளதாக கருதுகின்றனர். வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் பயணம் செல்லும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் உதவுகிறது

News September 2, 2024

திருவள்ளூர் ஆட்சியர் தலைமையில் கூட்டம் 

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா-2024 நடைபெறுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காவல்துறை மற்றும் அனைத்து துறை முக்கிய அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.

News September 2, 2024

திருவள்ளூர்: முன்பதிவு செய்ய இன்று கடைசி நாள்

image

திருவள்ளூரில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பல்வேறு பிரிவினரும் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்து . விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் .இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்ய முடியும்.

News September 2, 2024

புழல் சிறையில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

image

புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் திறக்கப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளது. புழல் சிறையில் மூடிய கேன்டீனை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி விசாரணை கைதி பக்ருதீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை செப்.10 ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News September 2, 2024

நகைக் கடையில் திருடியவா் கைது: தங்கம், வெள்ளி மீட்பு

image

திருத்தணி நகைக் கடையில் திருடிய நபரை போலீஸாா் நேற்று கைது செய்து, தங்கம், வெள்ளிப் பொருள்களை மீட்டனா். முருகப்ப நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (55). இவரின் நகை அடகுக்கடையில் 43 கிராம் தங்க நகைகள், 2 கிலோ 880 கிராம் வெள்ளி, ரூ.68,000 பணத்தைத் திருடிச் சென்றனா். விசாரணையில் அடகு கடையில் திருடியவா் சென்னை சைதாப்பேட்டையை சோ்ந்த பங்க் முருகன் (61) என்பது தெரியவந்தது.

News September 2, 2024

வருவாய் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் ஜவுளி தொழில் முனைவோர்களுடன் சிறிய அளவிலான பூங்கா ஜவுளி பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் முனைவோருக்கு 2 கோடி 50 லட்சம் ரூபாய் வரை நீதிபதி தமிழக அரசால் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

News September 1, 2024

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று கரையை கடந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 1, 2024

உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க தீர்மானம்

image

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்களுக்கான கூட்டம் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 1, 2024

திருத்தணி நகைக்கடையில் திருடிவர் கைது

image

திருத்தணி என்.எஸ்.போஸ் சாலையில் உள்ள நகைக் கடை மற்றும் அடகு கடையில், நேற்றிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த 43 கிராம் தங்க நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பங்க் முருகன்(60) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.

News August 31, 2024

முதல்வர் கோப்பை போட்டி கால அவகாசம் நீட்டிப்பு

image

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 5 பிரிவுகளில், 27 விளையாட்டு போட்டிகள், மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிக்கு வரும் செப்.2ஆம் தேதி வரை, முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!