Thiruvallur

News March 9, 2026

திருவள்ளூர்: 3.53 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை

image

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மகளிர், மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களில், 3 லட்சத்து 53,858 பெண்கள், இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 9, 2026

கடம்பத்தூர்: போலீசாரை மிரட்டிய மூவர் கைது!

image

திருவள்ளூர்: கடம்பத்துாரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாரை நேற்று முன்தினம் ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், கடம்பத்துாரைச் சேர்ந்த பவர் சீனிவாசன்(19), வைசாலி நகரைச் சேர்ந்த உஸ்மான்(22), இலுப்பூரைச் சேர்ந்த ஹேராம்(23) எனத் தெரிய வந்தது. தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 9, 2026

JUST IN: திருவள்ளூரில் உடல் கருகி சிறுவன் பலி!

image

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி – முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சீனிவாசன் (15) , அருகே உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 8) பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மின் கசிவு காரணமாக வீடு தீ பிடித்து எரிந்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 9, 2026

திருவள்ளூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

திருவள்ளூர் வட்டாட்சியர் எண்கள்

image

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 9, 2026

கும்மிடிப்பூண்டி: திமுக மீது நிர்வாகி குற்றச்சாட்டு!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி மேல் தெரு ஊராட்சி மன்றர் கௌரி சங்கர் வன்னியர் சமூகத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். சமூக முன்னேற்றத்திற்கு தேவையான பதவிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை திமுக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

News March 9, 2026

கும்மிடிப்பூண்டி: திமுக மீது நிர்வாகி குற்றச்சாட்டு!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி மேல் தெரு ஊராட்சி மன்றர் கௌரி சங்கர் வன்னியர் சமூகத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். சமூக முன்னேற்றத்திற்கு தேவையான பதவிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை திமுக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

News March 9, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று(மார்ச் 8) இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகத் தலைவரை, அதே அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்தனர். இதுதொடர்பாக, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

News March 9, 2026

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.08) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News March 8, 2026

திருவள்ளூர்: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!