Thiruvallur

News March 10, 2026

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

திருவள்ளூர்: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 10, 2026

கும்மிடிப்பூண்டியில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் அவரது மகன் லோகேஷ் குமாருடன், பைக்கில், தச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுவாயல் அருகே இணைப்பு சாலையில் இருந்து, சென்னை-கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி திரும்பியது. அப்போது, தடுமாறிய ஜெயகிருஷ்ணன், லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்தார்.

News March 10, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News March 10, 2026

மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனு!

image

திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று (மார்ச்.9) வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) , மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

News March 10, 2026

திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

இன்று மார்ச்.9 திருவள்ளுர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான 500 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கு உரிய தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

News March 9, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

திருவள்ளூர்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

திருவள்ளூரில் 250 கோழிகள் இலவசம்!

image

திருவள்ளூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கவனத்திற்கு

image

திருவாலங்காடில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025 – 26ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணிகள், கடந்தாண்டு அக்.27ஆம் தேதி தொடங்கி, நிர்ணயிக்கப்பட்ட கரும்பு அரவை இலக்கான 2 லட்சம் டன்களில், கடந்த 2ஆம் தேதி வரை, 1.86 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை செய்து வரும் விவசாயிகள் நாளைக்குள் கரும்பை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!