India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 22 மி.மீ, கும்மிடிப்பூண்டி 18 மி.மீ, சோழவரத்தில் 8 மி.மீ, செங்குன்றத்தில் 13.6 மி.மீ, ஜமீன் கெரட்டுர் 8 மி.மீ மழை, பூந்தமல்லி 8.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைகின்றனர். மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருங்கள்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் திருவள்ளூா் மாவட்டத்தில் கடம்பத்தூா், ஈக்காடு, தாமரைப்பாக்கம், பூண்டி, திருமழிசை, பட்டரைபெரும்புதூா், எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கடுங்குளிா் நிலவியதால் பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் முடங்கினா்.
திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னையின் ரயில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் நிறுவுவ வேண்டும். கும்மிடிப்பூண்டி – சென்னை மத்திய புறநகர்ப் பிரிவை மேம்படுத்த வேண்டும். வேகமான லூப் லைன்களை அறிமுகப்படுத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய விரைவு ரயில்களுக்கான நிறுத்தங்களை திருவள்ளூரில் நிறுத்த வேண்டும் என எம்.பி சசிகாந்த் செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு சார்ந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களிடம் தாங்கள் பங்குப் பெற்ற போட்டிகளின் சிறப்பு அம்சங்களை கேட்டறிந்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி சம்பத் என்பவரின் மகன் ஜெகன்(32). இவருக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெகன் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்வது போல இந்த ஆண்டும் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெகன் சபரிமலையில் மேலே நடந்து சென்ற போது திடீர் மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆரம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 465 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.