India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாங்காடு பாக்கம் மற்றும் சென்ற பாக்கம் ஊராட்சிகளில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் ஒன்றிய ஆணையர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் டி கிருஷ்ணகுமார், பி பி பாலாஜி ஆகியோர் விசாரித்து இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. வைத்திய வீரராகவ பெருமாள் சமேதராக ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சியளிக்கும் இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமிக்கு துளசி மாலை வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்., பிரியாணி உணவகத்தில், 16ம் தேதி, பிரியாணி சாப்பிட்ட, 40 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதே நாளில் பொன்னேரியில் உள்ள அதன் கிளை உணவகத்திலும் பிரியாணி சாப்பிட்ட சிலரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.அலமாதியில் உள்ள சமையல் கூடத்தை, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
பள்ளிப்பட்டு அடுத்த கொளத்தூர், அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூர் பேட்டை, மேலப்பூடி, பாலபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படும். காக்களூர் மின் நிலையம் மற்றும் கடம்பத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.