Thiruvallur

News March 14, 2026

திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News March 14, 2026

திருவள்ளூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 14, 2026

அறிவித்தார் திருவள்ளூர் ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச்.15) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்கள் என மொத்தம் 244 பேர் தேர்வு எழுத உள்ளனர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

திருவள்ளுர்: நடுரோட்டில் திடீரென தீ பற்றி எரிந்த லாரி

image

திருத்தணி அருகே சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றியது. நகரியில் இருந்து எம்-சாண்ட் ஏற்றி திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியை, ஓட்டுநர் பாஸ்கர் உடனே சாலையோரம் நிறுத்தினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர்தப்பினார்.

News March 14, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News March 13, 2026

திருவள்ளூர்: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 13, 2026

கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை!

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 45 வயது பெண், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரில் கும்மிடிப்பூண்டி மகளிர் போலீசார் ரஞ்சித், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர்

News March 13, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். *ஷேர் பண்ணுங்க*

News March 13, 2026

திருவள்ளூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருவள்ளூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27667070) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 13, 2026

ஆவடி: காவல் ஆணையகரத்தில் காத்திருக்கும் அதிகாரிகள்

image

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்ஸ்பெக்டர்கள், SI-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு SI-க்கள், காவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் 2 முறை பணியிட மாற்றம் கேட்டு விருப்ப மனு அளித்தனர். பணியிட மாற்றம் செய்யப்படும் என காத்திருந்த நிலையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!