India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ் பிக்கு கொரியர் வாகனங்கள் மூலம் குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவலின் பெயரில் போலீசார் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் சோதனை ஈடுபட்டனர், அப்போது வந்த கொரியர் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 4பண்டல்களில் 300 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது, பெங்களூரில் இருந்து நிதிஷ்குமார் என்பவர் வரவைத்து தெரியவந்தது, அடுத்து அவரை கைது செய்து, மேலும் ஒருவரை விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
போலியான இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலமாக கடன் பெற்றாலோ அல்லது போலியான லோன் ஆப் இன்ஸ்டால் செய்தாலோ,செல்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, புகைப்படங்களை தவறாக சித்தரித்து மக்களிடம் பணம் கேட்டு மிரட்டும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. எனவே இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் அலமதி, எண்ணூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்பட உள்ளது. கீழ்கொண்டையார், அரக்கம்பாக்கம், தாமரைப்பாக்கம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், கடவூர், அயிலச்சேரி, குருவயல், பூச்சி அத்திப்பேடு, கொடுவள்ளி, கர்பாக்கம், வெல்டெக் சாலை, கத்திவாக்கம், எண்ணூர் பஜார், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், வி.ஓ.சி.
FEDEX கொரியரில் இருந்து உங்களது பெயரில் பார்சல் அனுப்பி இருப்பதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் கூறி உங்களை காவல் துறையிடம் இணைப்பதாக கூறுவர். பின்பு காவல் அதிகாரி என பேசும் நபர் உங்கள் மீது FIR பதிவு செய்து இருப்பதாக மிரட்டி உங்களிடம் இருந்து வங்கி விவரங்கள், பணத்தை கேட்டு மிரட்டுவர். இது போன்ற அழைப்புகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் காமராஜர் திருமண மண்டபத்தில் செப் 29 ஆம் தேதி தமிழக சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தலைவர் சந்தனகுமார் தலைமையில் அறிவிக்கப்படவுள்ளது. இவர் ஏற்கனவே சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார் .தற்போது தனியாக கட்சி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜவர்கலால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அக்:9.10.2024 அன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் பேச்சுப் போட்டிகள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் வாயிலாக நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி பயிலுகின்ற மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் தகவல்
திருவேற்காடு பிரியாணி கடைக்கு சென்ற சிறுமியிடம் கடையில் பணிபுரியும் புரியும் மதன்குமார் என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை உறவினர் ஒருவர் தட்டி கேட்க சென்ற போது மதன் குமாரும் அவருடைய நண்பர் கிஷோர் குமார் இருவரும் தாக்கியுள்ளனர். இது குறித்து இருவேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. இதில் மதன் குமார் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். கிஷோர் குமார் உறவினரை தாக்கியதற்காக கைது செய்யபட்டார்.
Sorry, no posts matched your criteria.