India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் மிக முக்கிய மலையாக இருப்பது நீலகிரி மலைப்பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்தில் புல்வெளி காடுகள் அழிக்கப்பட்டு, வெளிநாட்டு மரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால் காலநிலையும் மாறுபட்டது. இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற வழிகாட்டலின் படி, வெளிநாட்டு மரங்கள் அகற்றப்பட்டு, மீண்டும் புல் வெளி காடுகள் அமைக்க வனத்துறை முடிவு எடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதற்காக சாதனை செய்தவர்கள் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சிறுபான்மையின் நலத் துறையினர் தெரிவித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 20ம் தேதி ஆகும்.
கூடலூர் நகரின் மையப் பகுதியான காந்தித் திடல் பகுதிக்கு கூட்டமாக உலா வந்த காட்டு பன்றிகளால் காலை நடை பயணத்திற்கு வந்த மக்கள் அச்சமடைந்தனர். சமீப காலமாக நகரப் பகுதிக்கு யானை போன்ற விலங்குகள் உலா வருவது அதிகரித்து வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இவை மீண்டும் வராத வகையில் சம்பந்தப்பட்ட துறை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம், மாவட்ட காவல் துறை அலுவலரால் (23.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.
நீலகிரியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில், விதிமீறல் காரணங்களுக்காக சுமார் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் வாகன ஓட்டுனர்கள் விதி மீறல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், வழக்குகள் சம்பந்தமான தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வு பயிற்சி, காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று உதகையில் நடைபெற்றது. கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளில் காவல்துறைக்கு பெரிதும் உதவக்கூடியது தடயவியல் ஆகும். அதற்குரிய ஆய்வு பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலமாக, நீலகிரி மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம், கீர்த்தி சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முகாமினை தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் பி.பார்ம் பட்டம் மற்றும் டி.பார்ம் ஆகிய பட்டம் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் வைக்க www. mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தெரிவித்துள்ளார். மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் இடம் கட்டிடமாக இருக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் விருது வழங்கப்படுகிறது. அதன் படி பெண்கள் தேசிய குழந்தை தினமான ஜனவரி 24ம் நாள் அன்று பாராட்டு பத்திரமும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.தகுதி உடையவர்கள் சம்பந்தப்பட்ட இணையதளத்தை அணுகி பூர்த்தி செய்யலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கர்நாடகா சிக்கால்பூரை சேர்ந்த 16 பேர் சபரிமலை சென்று தரிசனம் முடித்து, அங்கிருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஊட்டி வழியாக கர்நாடகம் நோக்கி கூடலூர் அருகே ஆகாசபாலம் பகுதியில் சென்றபோது, இவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ், சீனிவாஷ், நாகராஜ், நாச்சிமுத்து, ஆதிநாராயணன் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.