Thenilgiris

News March 8, 2026

நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

image

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கோழிக்கரை, கேஎன்ஆர் பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது யானைகள் மூன்று நாட்களாக சுற்றி வருகின்றன. எனவே குன்னூர் வனச்சரகர் ரவீந்தர நாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 8, 2026

நீலகிரி கலெக்டர் வேண்டுகோள்!

image

பந்தலூர் அருகே தாளூர் பகுதி தமிழக – கேரளா மாநில எல்லையில் கேரளம் நெடுஞ்சாலை துறையினர் மலையாள மொழியின் வரவேற்பு பலகையை பிரச்சினைக்குரிய இடத்தில் வைத்தனர். இதனால் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், இவ்விவகாரம் தொடா்பாக வயநாடு ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

News March 8, 2026

கூடலூர்: செக்ஷன் 17 நில பிரச்சினை – ஆட்சியரிடம் MLA மனு

image

கூடலூரில் செக்ஷன் 17 நில பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் அனுப்கான், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 8, 2026

கூடலூர்: செக்ஷன் 17 நில பிரச்சினை – ஆட்சியரிடம் MLA மனு

image

கூடலூரில் செக்ஷன் 17 நில பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் அனுப்கான், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 8, 2026

கூடலூர்: செக்ஷன் 17 நில பிரச்சினை – ஆட்சியரிடம் MLA மனு

image

கூடலூரில் செக்ஷன் 17 நில பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் அனுப்கான், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 7, 2026

நீலகிரியில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

நீலகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500 3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090 4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098 5. முதியோருக்கான அவசர உதவி : 1253 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 7, 2026

நீலகிரி: FEES இல்லமல் வக்கீல் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

நீலகிரி: உங்க PHONE தொலைந்து விட்டதா?.. NO டென்ஷன்!

image

நீலகிரி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

image

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!