Thenilgiris

News March 4, 2026

கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் இவரா?

image

பந்தலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் மாங்கோடு கா.ராஜா, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட இன்று சென்னை திமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கினார். மாவட்ட செயலாளர் கே.எம். ராஜு மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் RP. பரமேஷ்குமார் ஆகியோருடன் சென்று அவரை விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

News March 4, 2026

குன்னூர் அருகே விபத்து!

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேலாஸ் பகுதியில் நேற்று மாலை 7, குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கெந்தளா நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் பேருந்தின் வலதுபக்க கண்ணாடி உடைந்தன. நல்வாய்ப்பாக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

News March 4, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்! முக்கிய தகவல்

image

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

நீலகிரி: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

image

நீலகிரி மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 3, 2026

நீலகிரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை! சூப்பர்வைசர் பணி

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

நீலகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு! CLICK & APPLY

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். SHARE IT.

News March 3, 2026

BREAKING நீலகிரிக்கு முதல்வர் அறிவித்தார்!

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என அதில் இடம் பெற்றுள்ளது.

News March 3, 2026

கூடலூர் தொகுதியில் வேட்பாளர் இவரா ?

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூடலூர் தொகுதியில் போட்டியிட கூடலூர் நகரமன்றத் தலைவர் ச.பரிமளா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் விருப்பமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் போட்டியிட திமுகவின் ராஜேந்திரனும் விருப்பமனு அளித்துள்ளதால், வேட்பாளர் தேர்விலேயே இப்போதே கூடலூர் தேர்தல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.

News March 3, 2026

நீலகிரியில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் தலைமை தபால் நிலையத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் (E-mail) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!