Thenilgiris

News August 25, 2025

நீலகிரி: 800க்கும் மேற்பட்ட போலீசார்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இதுவரை 512 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலை ஊர்வலத்தை ஒட்டி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

News August 24, 2025

நீலகிரி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

நீலகிரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Station Controller பதவிக்கான 368 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 24, 2025

நீலகிரி: 800க்கும் மேற்பட்ட போலீசார்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இதுவரை 512 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலை ஊர்வலத்தை ஒட்டி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

News August 24, 2025

நீலகிரி எம்.பி நிகழ்ச்சி நிரல் விபரம்

image

நீலகிரி எம்.பி ராசா வரும் ஆக.26 ஆம் தேதி கோத்தகிரி புனித அந்தோனியார் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஊட்டியில் துவக்கி வைத்தல், காலை 11:00 மணிக்கு ஊட்டியில் மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தம் திறப்பு, 11:30 மணிக்கு காந்தல் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட உருது பள்ளியை திறந்து வைக்கிறார்.

News August 24, 2025

நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழையளவு

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து கூடலூரில் 2 மில்லி மீட்டர் மழையும், நடுவட்டம் 7 மில்லி மீட்டர் மழையும், பந்தலூரில் 4 மில்லி மீட்டர் மழையும், தேவாலாவில் 3 மில்லி மீட்டர் மழையும், உதகமண்டலம் 32 மில்லி மீட்டர் மழையும், பரவுட் 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

நீலகிரி: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

image

நீலகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்கள். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 24, 2025

நீலகிரியில் கரண்ட் பில் அதிகமா வருதா?

image

கரண்ட் பில் கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இது போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..!

News August 24, 2025

பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றோரை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி

image

கூடலூர் காந்திதிடலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற இளைஞர் அணி தொண்டர்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மாவட்டத்தலைவர் வாப்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வி.கே.அனீபா தொகுத்து வழங்கினார். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கைச்சேர்ந்தோர் திரளாக கலந்து கொண்டனர்.

News August 24, 2025

நீலகிரி ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு

image

நீலகிரி, விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சியாக கொண்டாடப்படும். அதேப்போல் காவல்துறையின் ஒத்திகையை நடைப்பெற்றது. விநாயகர் சதுர்த்தியின்போது அசம்பாவித ஏதேனும் நடக்காமல் காவல்துறையின் பாதுகாப்பு அதிகமாக காணப்படும் என காவல்துறையின் சார்பாக தெரிவித்தனர். இதன் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

News August 23, 2025

அதிக நிலச்சரிவு ஆபத்தில் நீலகிரி!

image

தமிழகத்தில் சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதிகள், நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) கண்டறிந்துள்ளது. இந்த விவரங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் இந்தியாவில் அதிக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டமும் கண்டறியப்பட்டுள்ளது.

error: Content is protected !!