India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, எழுத்துத் தேர்வில்லாமல் மத்திய அரசு பணி வாய்ப்பை பெற வேண்டுமா? சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரியில் வெடிமருந்து தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமான அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில், பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 77 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அடிப்படை சம்பளமாக ரூ.19,900 வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தில் தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மற்றும் விரிவாக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். (தையல், மரவேலை, காலனி தயாரித்தல், அழகு கலை, கூடை முடைதல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல் மேலும் பல). கூடுதல் விபரங்களுக்கு 0423- 2443947, 8925533995, 8925533997. SHARE பண்ணுங்க!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அடுத்த 48 மணிநேரத்தில் ஒடிசா-மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.ஆக.27, 28 ஆகிய இரு நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசும்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (25.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கோவை மண்டல ஆணையர் எம்எஸ் ஆனந்த ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நடப்பு மாதத்துக்கான குறை தீர்ப்பு கூட்டம், வரும் 28ஆம் தேதி கோத்தகிரி அருகே உள்ள அரவேணு ஆல்பா ஜிகே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களே..நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர், சங்கீதா என்பவர் களிமண் மற்றும் விதைகளை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.விநாயகரின் கண் மற்றும் மூக்கு பகுதிகளில் மஞ்சாடி கொட்டை எனும் விதையையும், பிற இடங்களில் நவதானியங்களையும் சேர்த்து உருவங்களை உருவாக்கி வருகிறார்.

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இதுவரை 512 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலை ஊர்வலத்தை ஒட்டி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.