India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்எஸ் நிஷா இன்று நக்சல் தடுப்பு பிரிவுடன், மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டார். இந்த தேடுதலின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு உடை அணிந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது
நீலகிரி: கோத்தகிரி ஒரசோலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (65) என்பவர் இன்று குன்னூரில் இருந்து, கோத்தகிரி நோக்கி வந்த பேருந்தில் ஏறும் போது, நிலைதடுமாறி விழுந்து அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கூடலூர், நாடுகானி குடோன் பகுதியில், தனியார் நிறுவனத்தின் டெலிபோன் டவர் உள்ளது. அங்கு கடந்த டிசம்பர் 1 தேதியன்று, இருவர் டீசல் திருடியது CCTV Camera வில் பதிவாகியது. அந்த டீசல் திருட்டில் ஜீப் டிரைவர் சத்யராஜ் மற்றும் ராஜூ ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து தேவாலா போலீசார் இருவரையும் தேடிவருகின்றனர். ஜீப் , டீசல் கேன்கள், மற்றும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. பிங்கர் போஸ்ட் பகுதியில், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்க கூட்டத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், 6-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி 643001, என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம், மின்னஞ்லுக்கு jdooty@gmail.com.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம், வரும் 18ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, அனைத்து அரசு வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் முதலியவற்றில் கொண்டாடப்படும். மேலும், ஆட்சி மொழி சட்டம், அதன் வரலாறு குறித்து, பிழையின்றி எழுத பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நீலகிரியின் கூட்டுறவு தந்தை என்றழைக்கப்படும் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உதகை ராவ்பகதூர் ஆரிகவுடர் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எச்.பி.ஆரிகவுடர் நினைவு விழாக்குழு தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை.வி.மோகன் தலைமையில் நடைப்பெற்றது.
➤ அரசு பேருந்தை வழிமறித்த காட்டெருமை ➤ முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி ➤ வெலிங்டன் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ➤ நீலகிரியில் பெய்து வரும் மழையால் பூண்டு செடிகள் பாதிப்பு ➤ நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு ➤ ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம் ➤ கோத்தகிரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் ➤ குன்னூரில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து ➤ பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பால்மாரலீஸ் நோக்கி சென்ற அரசு பேருந்து, கரும்பாலம் தொழிற்சாலை அருகே செல்லும்போது, பேருந்தின் மெய்ன் பிளேடு அருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்கள் உடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.