Thenilgiris

News December 7, 2024

அவசர காலத்தில் தயாராக இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்

image

முதல்நிலை பொறுப்பாளர்கள் அவசர காலத்தில் செயல்பட தயாராக இருக்க வேண்டும், நீலகிரியில் அபாயகரமான பகுதிகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பதுடன், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சப்–கலெக்டர் சங்கீதா, ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

News December 7, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் டிச.05ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், டிச.10ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளான் தெரிவித்துள்ளார்.

News December 7, 2024

கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ விசாரிக்க அனுமதி

image

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை நீதிமன்றத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சம்பவம் நடந்த போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பா மற்றும் இளவரசி, சுதாகரன், அப்போதைய மாவட்ட ஆட்சியர் சங்கர், அதிமுக பிரமுகர் சஜீவனையும் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

News December 7, 2024

ஹெத்தையம்மன் கோவிலில் சீமான் வழிபாடு

image

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பகுதியில் உள்ள தனியார் அரங்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக கேர்பெட்டா படுகர் இன கிராமத்திற்கு சென்ற அவர், அங்குள்ள ஹெத்தை அம்மன் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டு, கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

News December 7, 2024

நீலகிரி: இன்றைய ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுளளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News December 6, 2024

நீலகிரி விவசாயிகளே இன்றே கடைசி நாள்!

image

நீலகிரி விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை இன்று (6.12.24) மாலைக்குள், மின் அஞ்சல்: (jdooty@gmail.com) மூலம் தெரிவிக்க வேண்டும் என தோட்டகலை இணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

image

தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்த மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 10 தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது . இந்த தகவலை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

‘ மினி டைட்டில் பூங்கா ‘ கொறடா ஆய்வு

image

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எடப்பள்ளி கிராமத்தில் புதிதாக அமைக்கபட இருக்கும் ‘மினி டைடல் பூங்கா’ மற்றும் உலக தரத்தில் அமையவிருக்கும் புதிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பகுதிகளை தமிழ்நாடு தலைமை கொறடா ராமசந்திரன் நேரில் ஆய்வு மேற் கொண்டார். அவருடன் அரசு பொறியாளர்கள், அலுவலர்கள், கழக நிர்வாகிகள் சென்றனர்.

News December 6, 2024

யானை தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்

image

தேவர்சோலை பேரூராட்சி செம்பங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கேத்தி (55). இவர் மண் வயல் கடை வீதியில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நேற்று திரும்பி சென்று கொண்டு இருந்தார். போஸ்பறா சங்கிலி கேட் பகுதி சென்ற போது, புதரிலிருந்து வெளிவந்த யானை தாக்கி காயம் அடைந்தார். உடனே இவர் உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

News December 6, 2024

பொக்காபுரம் கோயிலுக்கு மாவட்ட ஆட்சியர் வருகை

image

நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் புகழ்மிக்க கோவில்களில் ஒன்றான, மசினகுடி அருகே உள்ள சோலூர் பொக்கபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்துக்கொண்டார். சோலூர் கிராம மக்களின் பாரம்பரியக் கோவிலான, இந்த கோவில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

error: Content is protected !!