India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட சிலர் கட்டட பணிகள் நடைபெறும் இடங்களில் லஞ்சம் பெற்றதாக கவுன்சிலர் ஒருவர் கூட்டத்தில் குற்றம் சாட்டினார் . இத்தகைய ஊழல் சம்பவங்களைப் பற்றிய புகார்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு 0423-2443962 எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். (SHARE IT).

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்கா பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் வரும் செப்டம்பர் 2 தேதி நடைபெறவுள்ளன. கூடலூரில் ஒன்னாவது மைல் என்.எஸ். ஆடிட்டோரியம், தேவர்சோலை பஜார் CSI சர்ச் ஹால் ஆகிய இடங்களில் மற்றும் பந்தலூரில் சேரம்பாடி சுங்கம் செபாஸ்டின் ஹால், உப்பட்டி பாரத மாதா பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நீலகிரி மாவட்டம் உதகை வட்டாரத்தில் உள்ள செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. மருத்துவ சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இந்த முகாமில், செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து பயன்பெறுமாறு மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் செய்தித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Financial Inclusion Officer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <

தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் 2,513 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 50 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. சம்பளமாக ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வழங்கப்படும். விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும், எனவே https://www.drbngl.in/ என்ற இணையதளத்திற்கு சென்று உடனே விண்ணப்பிக்கவும். அரசு வேலை பெற அருமையான வாய்ப்பு இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

நீலகிரி மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <

நீலகிரியில் கனமழையால் 283 பகுதிகள் அதிக ஆபத்து ஏற்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 24 மணி நேரம் மீட்பு பணிகளுக்காக தீ மற்றும் மீட்பு குழுவினரை கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ▶️ 0423-2442999 ▶️ 9445086501 ▶️ உதகை 0423-2442999 ▶️ குன்னூர் 0423-2230101 ▶️ கோத்தகிரி 04266-274101 ▶️ கூடலூர் 04262-261399. இதை உடனடியாக மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

நீலகிரியில் கனமழை காரணமாக அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய, 283 பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் 3600 முதல் நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய் துறையினரை அணுகி, அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மழை நீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.