Thenilgiris

News March 10, 2025

குன்னூரில் யானை தாக்கி ஒருவர் பலி

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆர்டர்லி பகுதியில் சேம்பக்கரை என்னும் பழங்குடியினர் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 33) என்பவர் இன்று யானை தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News March 10, 2025

நீலகிரியில் வேலை! உடனே விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரியில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். <<>>ஊதியம் ரூ.20,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.3.25 ஆகும்.

News March 10, 2025

நீலகிரி: அரசு தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலை

image

தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்

News March 9, 2025

இயற்கை எழில் கொஞ்சும் அன்னமலை முருகன் கோயில்!

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியவர் கிருஷ்ண நந்தாஜி. அவரோடு மக்களும் இணைந்து நிறுவியுள்ளனர். கோயிலின் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது சிவன் குகை. இங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் குகை அமைந்துள்ளது. இதில் தான் அன்னமலை கோயில் அமைய காரணமாக அமைந்த கிருஷ்ண நந்தாஜி தவம் செய்ததாக தகவல்.

News March 9, 2025

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

image

கூடலூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை என்ற இடத்தில் இன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் சுற்றுலா பேருந்து 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்திற்கு இடத்திற்கு ‌மருத்துவ குழுவினர், மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

News March 9, 2025

நீலகிரி மாவட்டத்தில்  கடும் குளிர் நிலவுகிறது

image

நீலகிரி மாவட்டத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது.நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் இன்று காலை குளிர் அதிகமாக இருந்தது.குளிரின் தாக்கத்தை எதிர்பாராமல் இருந்த சுற்றுலா பயணிகள் கம்பளி  ஆடைகளை அணிந்தவாறு சென்றனர். உள்ளூர்வாசிகள் பகல் நேரத்தில் தீ மூட்டி தங்களது உடலை சூடேற்றி கொண்டனர்

News March 9, 2025

சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

image

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், வனப்பகுதியில் வறண்டு காய்ந்து கருகி உள்ளது. மேலும், மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பீடி – சிகரெட் போன்றவைகள் வனப்பகுதியில் புகைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். 

News March 9, 2025

நீலகிரி பெயர் எப்படி வந்தது?

image

நீல நிறத்தில் பூக்கும் குறிஞ்சி மலர்கள் காரணமாக, அப்பகுதி மக்கள் நீலகிரி என பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது. (நீல – நீலம் மற்றும் கிரி – மலை) இந்த பெயரைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடுகையில் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. ‘நீலகிரி’ என்பது நீல மலை ஆகும் . நீலகிரி மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது? கமெண்ட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News March 9, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (08.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News March 8, 2025

நீலகிரி நிர்வாகத்தில் மகளிர் ஆட்சி: ஒரு பார்வை

image

மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா பதவி வகித்து வருகிறார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக எஸ்பி நிஷா உள்ளார். தோட்டக்கலை துறை இணை இயக்குநராக சிபிலா மேரி பணிபுரிந்து வருகிறார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக கீதாவும், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும், மாவட்ட நூலக அலுவலர்களாக வசந்த மல்லிகா ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு முக்கிய அரசு துறையில் பெண் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

error: Content is protected !!