Thenilgiris

News February 10, 2025

ஊட்டி ஏரியில் ஓட்டல் தொழிலாளி பிணம்.

image

ஊட்டி படகு இல்லாத ஏரியில் பிணம் உள்ளதாக ஊட்டி ஜி1 காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தவர் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (60) ஓட்டல் தொழிலாளி என்பது தெரிந்தது. போலீசார் விசாரித்தனர்.

News February 10, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 9, 2025

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் இன்று உதகை பகுதியிலிருந்து, திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், மதுரையில் இருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி சிறு விபத்து  ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில், பேருந்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

News February 9, 2025

நீலகிரி ஆட்சியர் உத்தரவு!

image

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு, வரும் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக, நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். அதன்படி மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப், பார்கள் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எவரேனும் மதுபானங்களை விற்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News February 9, 2025

தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் 

image

பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நாளை நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும், இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளனர். தேர்வு பெற்றால் ஊக்க தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

News February 9, 2025

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

image

கோத்தகிரியில் ரத்தக்காயங்களுடன் கிடந்த குரங்கை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நீலகிரி நகர் புறத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த குரங்கை மீட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்ற புகைப்படங்கள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது வருகின்றன. உயிர்போகும் இறுதி நொடியில் குரங்கை காப்பாற்றியுள்ளார்.

News February 8, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து மினி பேருந்துகள் குறித்த புதிய விரிவான திட்டம் 1924 கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகிறது. இதற்காக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

News February 8, 2025

மக்காத குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்ப உத்தரவு

image

உதகை நகரில் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். சேகரிக்கப்படும் குப்பைகளை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் உரக்கிடங்கில் உரமாக மாற்றவும், மக்காத நெகிழி குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

News February 8, 2025

+2 செயல்முறை தேர்வு: நீலகிரி மாணவர்கள் ஆர்வம்

image

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 பள்ளிகளில் பிளஸ் டூ பயின்று வரும் 8,075 மாணவ மாணவிகள் செயல்முறை தேர்வில் கலந்து கொண்டனர்.

News February 8, 2025

நீலகிரியில் விபத்து: 2 வாலிபர்கள் மரணம்!

image

கூடலூர் பகுதியை சேர்ந்த அருள், ராஜேஷ்குமார் என்று இரண்டு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து டேங்கர் லாரியில் பால் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓசூர் பகுதியில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!