Thenilgiris

News February 12, 2025

நீலகிரியில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

image

பந்தலூர் பெருங்கரை பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், அத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (45), நெல்லியாளம் பகுதியை சேர்ந்த, 14 வயது பெண், டிரைவர் ராஜேந்திரன் (55) ஆகியோர் காயம் அடைந்தனர். மூவருக்கும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்து காரணமாக, உப்பட்டி- பந்தலுார் இடையே 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News February 11, 2025

பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: போலீசார் குவிப்பு

image

நீலகிரி மாவட்டம் அருவங்காடு ஜெகதலா பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் அடைத்து 5 ஆண்டு காலத்திற்கு மேலாகியும் திறக்கப்படவில்லை என்று கூறி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

News February 11, 2025

ஊட்டி உருளை கிழங்கு இன்றைய விலை விவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஊட்டி உருளை கிழங்கை தினசரி ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்று முதல் ரகம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1720 க்கும், குறைந்த பட்சம் ரூ.1310 க்கும் விற்பனை ஆனது. இதில் மொத்தம் 400 மூட்டை விற்பனைக்கு வந்துள்ளன.

News February 11, 2025

யானை தாக்கி ஒருவர் மரணம்: மனைவி மாயம்

image

சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஐயன்கொல்லி அடுத்து நூல்புழ பகுதியை சேர்ந்த மனு மற்றும் அவரது மனைவி இருவரின் நேற்று தினம் இரவு முதல் காணவில்லை என்று தேடிவந்த நிலையில், அருகே உள்ள வனப்பகுதியில் மனு என்பவரை யானை தாக்கி மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் இவருடன் இருந்த இவரின் மனைவியை வனத்துறை தேடும் பணி ஈடுபட்டு வருகின்றனர்.

News February 11, 2025

ஜாதி சான்றிதழ் விவகாரம்: குழு அமைப்பு

image

நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடி மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மூத்த மானுடவியலாளர்கள் தமிழ்ஒளி, காளிதாஸ், அமுத வள்ளுவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு விரைவில் தட்டனெரி மற்றும் பன்னிமரம் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு தரும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

News February 11, 2025

மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை

image

நேற்று GDPயில் கலெக்டர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு வாரமும் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும்.அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதோடு, மனுதாரருக்கு சரியான விளக்கத்தினை அளிக்க வேண்டும். மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

News February 11, 2025

Ex. கவுன்சிலர் நாயை கடித்து குதறிய சிறுத்தை

image

பந்தலூர் அருகே அத்திகுன்னா தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ள கேகே நகரில் சிறுத்தை நடமாடியதைத் தொழிலாளர்கள் பார்த்து வனத்துறையை கூண்டு வைத்து அதை பிடிக்க வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வந்த சிறுத்தை முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி என்பவரின் நாயை கடித்து குதறி, விட்டு சென்று உள்ளது.

News February 10, 2025

நீலகிரிக்கு வந்த பிரபல நடிகை 

image

நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் செயல்பட்டு வந்த ஒரு நகைக்கடை புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. இதில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மேலும், 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க காயின் வழங்கப்பட்டது. 

News February 10, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

image

நாளை (பிப்.11) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் உள்ளிட்ட மது கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், மதுக்கடைகள், பாா்கள் ஏதேனும் திறந்திருந்தால், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், உதகை 0423-2223802, உதவி ஆணையா் 0423-2443693, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் எடப்பள்ளி, குன்னூா் 0423-2234211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

News February 10, 2025

நீலகிரி பத்திரபதிவு அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை

image

தைப்பூசம் தினத்தன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் உள்ள ஊட்டி கோத்தகிரி குன்னூர் கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். விடுமுறை நாள் ஆவண பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!