India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் முடிவால் விளிம்பு நிலை மக்களின் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவை தகர்த்தெறியும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கே.எம்.ராஜு இன்று தமிழக அரசு தலைமை கொறடா கா.இராமசந்திரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், திமுக பொது குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய செயலாளர் மற்றும் கழகத்தினர் உடன் இருந்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 42 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள்<
காதலர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பூங்கா, சுற்றுலா தளங்களுக்கு வரும் காதலர்களிடம் அத்துமீறாமல் இருக்கவும், அதேசமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாத வண்ணம் பாதுகாப்பு பணிகளில், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
திமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து தலைமைக்கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு, நீலகிரி, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக கே.எம்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
பந்தலூர் அருகே வெள்ளேரி சொரியான் காப்பு கிராமத்தை சேர்ந்தவர் மானு (47), இவரது மனைவி சந்திரிகா (38.) இருவரும் ஆட்டோவில் வயநாடு, காப்புகாடு கிராமம் அருகே இறங்கி நடந்து சென்றபோது எதிரே வந்த யானை தாக்கியதில் மானு அதே இடத்தில் உயிரிழந்தார். மனைவி ஓடி உயிர் தப்பினார். தகவல் அறிந்த வனத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் (39), கேரளா மாநிலத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தொழில் நஷ்டத்தால் ஊட்டிக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்ஐ சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
உதகையில் 150 ஆண்டுகளாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைவராக உள்ள இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்லாத காரணத்தால் 10- ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கொதிப்படைய செய்திருக்கிறது. இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.