India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி உட்பட ஆறு மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியினர் மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்க 26 வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பள்ளி சொல்ல வாகனம் இல்லாமல் மாணவர்களின் அவலத்தை மாற்றும் திட்டமாக இது உள்ளது.

நீலகிரி மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்.அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க.

நீலகிரி மக்களே.. கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்!

நீலகிரி மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நீலகிரி மாவட்ட மின் வாரியம் சார்பில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் மழை காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கால் ஆகியவை அருகே செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும் மின் சம்மந்தமான புகார்களை தெரிவிக்க 94987-94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில், அனுமதியின்றியும், விதிமீறி காட்டேஜ் போல செயல்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும், கட்டடங்களுக்கு, ‘சீல்’ வைக்கும் பணி, ஐகோர்ட் உத்தரவின் படி விரைவு படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில், விதிமீறிய 53 காட்டேஜ் கட்டடங்களுக்கு சீல் வைக் கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குன்னூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க. SHARE பண்ணுங்க!

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வரும் 7ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்டத்தில் பங்கு கொள்ள உள்ளார். அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை கூடலூரில் கொடிய அணிவகுப்பு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல், நியாய விலை கடை திறப்பு, உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி சிறப்புரை, மகளிர் சுய உதவி குழு விற்பனை கூடம் திறத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்ததில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் இம்மருந்து சப்ளை செய்யப்படவில்லை என கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். மருத்துவர் அறிவுரை இல்லாமல் குழந்தைகளுக்கு எந்த விதமான மருந்தையும் கொடுக்க வேண்டாம் என அறிவுரை!
Sorry, no posts matched your criteria.