Thenilgiris

News June 17, 2024

நீலகிரி: ஸ்ட்ராபெர்ரி பழம்  சீசன் தொடக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஸ்ட்ராபெர்ரி பழம் சீசன் தொடங்கி உள்ளது. நீலகிரி ஸ்ட்ராபெரி பழம் மிகுந்த சுவையாக இருப்பதால் நல்ல கிராக்கி நிலவுகிறது. தற்போது ஸ்ட்ராபெரி பழம் அறுவடை தொடங்கி உள்ளது. வியாபாரிகள் சாகுபடி நிலங்களுக்கு வந்து ஒரு கிலோ 
ரூ.300 விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 17, 2024

நீலகிரி: ஆ.ராசா வாக்காளர்களுக்கு நன்றி

image

நீலகிரி மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்ற திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா நேற்று கூடலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், 3 முறை வெற்றிபெறச் செய்திருக்கிறீர்கள். என்றும் நான் நன்றி மறக்க மாட்டேன், உங்கள் தொகுதி பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பேன் என்றார். அப்போது தமிழக அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட செயலர் முபாரக் உடனிருந்தனர்.

News June 16, 2024

நீலகிரி: 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 16, 2024

குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம்

image

குன்னூர் ஒய்.எம்.சி‌.ஏ அரங்கில் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க 35வது பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சங்க தலைவர் சு.மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குன்னூர் ரயில்வே கேட் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் செயலாளர் ஆல்துரை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

News June 16, 2024

உதகை: 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

image

உதகையில் இருந்து லவ்டேல் செல்லும் சாலையில் காந்தி நகர் உள்ளது. நேற்று (ஜூன் 15) மாலை 5 மணியளவில் ஒரு கார் லவ்டேல் நோக்கி சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார் 50 அடி பள்ளத்தில் உருண்டு தலை கீழாக கவிழ்ந்தது. கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உதகை நகர மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 16, 2024

கூடலூர் தோப்பில் சிறுத்தை உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன சரகத்திற்கு உட்பட்ட புளிம்பாறை கிராமத்தில் உள்ள தனியார் பாக்கு தோப்பில் சிறுத்தை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு நேற்று தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில் விரைந்தனர். இதையடுத்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உடற்கூறாய்வு செய்தார். இது 5 வயது பெண் சிறுத்தை என்பது தெரிய வந்தது.

News June 15, 2024

இ-பாஸ் பணியால் பள்ளி பணி பாதிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறையில் பணி புரியும் அலுவலர்கள் இ-பாஸ் பணிகளுக்காக சோதனை சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பள்ளி உதவியாளர் மற்றும் லைப்ரரி அலுவலர்களும் அனுப்பி வைக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

News June 15, 2024

நீலகிரி: 26 உதவி ஆய்வாளர்கள் பதவி ஏற்பு

image

நீலகிரி மாவட்டத்தில் 1999ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து பணியாற்றி,  தற்போது தலைமை காவலர்களாக இருப்பவர்கள் 26 வருடங்கள் நிறைவு பெற்று உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர். இதற்காக  26 பேரும் நேற்று  உத்திரவு ஆணை பெற்றனர். அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

News June 14, 2024

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

image

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில நாட்களாக மழையின் தாக்கம் இல்லாத நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் குன்னுார் சேலாஸ் அருகே சோல்ராக் சாலையில் இன்று  காலை 8 மணியளவில் மரத்தின் பெரிய கிளை உடைந்து சாலையில் விழுந்தது. இதனால் அரசு பேருந்துகள் உட்பட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

News June 14, 2024

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய கூட்டம்

image

குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் வருகிற ஜூன் 18, 19ஆம் தேதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய கூட்டம் நடைப்பெறுகிறது. கூட்டத்திற்கு புதுடெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி புருசைந்திர குமார் கவுரவ் தலைமை வகிக்கிறார். இதில் சாட்சியமளிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பிரமாண பத்திரங்களை (2 நகல்) தாக்கல் செய்து குறுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!