Thenilgiris

News July 5, 2024

மத்திய அமைச்சர் பயண திட்டத்தில் மாற்றம்

image

நேற்று நடப்பதாக இருந்த நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான பாஜக ஆய்வு கூட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு மேட்டுப்பாளையம் (EMS) மகாலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று மதியம் 1.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வருகிறார். இதில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட நீலகிரி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

News July 5, 2024

குழந்தை திருமணம் நடத்த தடை: நீதிபதி

image

ஊட்டி சமூக நலத்துறை அலுவலர் பிரவீனாதேவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தாஹினிதேவி ஆகியோர் கிளன்மார்கன் கக்குச்சி பகுதியில் 2 பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை தடுக்க கோரி ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை நேற்று விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குழந்தை திருமணத்திற்கு தடை விதித்து பெற்றோர்களை எச்சரித்தார்.

News July 4, 2024

நீலகிரி: Ex நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்!

image

நீலகிரி மாவட்ட அஇஅதிமுகவின் மூத்த நிர்வாகியும்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.கோபாலகிருஷ்ணன் இன்று காலை 6 மணி அளவில் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் குன்னூர் நகர மன்ற தலைவராகவும், கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆகவும் பதவி வகித்தார். இவரின் மறைவு குன்னூர் பகுதி அஇஅதிமுக நிர்வாகிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News July 4, 2024

நீலகிரி: படகு இல்லம் பணிகள் அதிரடியாக நிறுத்தம்

image

ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், ரூ.5,5 கோடி மதிப்பீட்டில் பலவகை சாகச விளையாட்டுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மாஸ்டர் பிளான் சட்டத்தின்படி ஏரியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு எந்தவித கட்டுமானங்களும் கட்டக்கூடாது. எனவே, இதை கருத்தில் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த பணியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

News July 3, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

குடிநீர் தொட்டியில் மலம்? நேரில் அதிகாரிகள் ஆய்வு

image

கோத்தகிரி கோடநாடு பகுதியில் மாற்றுத்திறனாளி மக்கள் வசிக்கும் பிரியா காலனி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவு கலந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம தலைவர் மணிகண்டன் மாவட்ட கலெக்டரிடம் நேற்று நேரில் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி இன்று அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

News July 3, 2024

நீலகிரி மக்களவை தொகுதி ஆய்வு கூட்டம்

image

நீலகிரி மக்களவை தொகுதிக்கான பாஜக ஆய்வு கூட்டம் நாளை பகல் 12 மணிக்கு மேட்டுப்பாளையம் (EMS) மகாலில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகிக்கிறார். இதில் நயினார் நாகேந்திரன் MLA பங்கேற்கிறார். இதில் மாநிலம், மாவட்டம், மண்டலம் நிர்வாகிகள் பங்கேற்பதாக மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது.

News July 3, 2024

நீலகிரியில் Ex கூடுதல் தலைமை செயலாளர் தர்ணா

image

நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுர்ஜித் சவுத்திரி நேற்று (ஜூலை 2) நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். விதிமுறைகளை மீறி பாறைகளை உடைத்து நடக்கும் கட்டட பணியை நிறுத்தக்கோரி சுர்ஜித் சவுத்திரி திடீர் தர்ணாவில் ஈடுபட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News July 2, 2024

மழையை எதிர்கொள்ள தயார்: நீலகிரி கலெக்டர்

image

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நீலகிரியில் மொத்தம் 26 வீடுகள் பகுதி சேதமடைந்து இருப்பதாகவும், ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 2, 2024

நீலகிரி: சாதித்த கலைஞர்களுக்கு பரிசு

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, கோவை மண்டலம் கலை பண்பாட்டு மையம் சார்பில், கடந்த, பிப்.25ம் தேதி, ஊட்டி கலை கல்லூரியில், மாவட்ட அளவிலான இளைஞர் கலைப் போட்டி நடந்தது.
இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு முறையே 6,000 ரூபாய், 4,500 மற்றும் பொன்னாடை போர்த்தப்பட்டது. 3,500 ரூபாய் ரொக்க பரிசு நேற்று மாலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார்.

error: Content is protected !!