India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளதால் அதிக வனவிலங்குகள் காணப்படுகின்றன. சாலையோரங்களில் காட்டு யானைகள் நடமாடுவதை சுற்றுலா பயணிகள் கண்டு படம் எடுத்து மகிழ்கின்றனர். வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, கீழே இறங்கவோ வேண்டாம் என்று வன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீலகிரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்படும் மேல்நிலை, நடுநிலை, தொடக்க பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யபடுகின்றன. தகுதி உள்ளவர்கள் ஜூலை 16-க்குள் ஆதிதிராவிடர், பழங்குடி நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அரங்கில் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது . இதில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 36 பணியாளர்கள் கோரிக்கை மனுக்களை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளனிடம் வழங்கினார்கள். இந்த மனுக்கள் இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு செய்யப்படும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் தெரிவித்தார் .
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்கள் தங்களது குறைகள் அடங்கிய விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் வருகின்ற 15ஆம் தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் சீல் வைக்கப்பட்ட காப்பகம் அருகே சதுப்பு நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் இரவில் ரகசியமாக புதைக்கப்பட்டதாக வந்த தகவலின்பேரில் ஆர்டிஓ, செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காப்பகம் அருகே புதைக்கப்பட்ட சதுப்பு நிலத்தை நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூலை 12, 13) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கூடலூர் தொட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா. இவர் நிலம் மறுவறை தொடர்பாக தாசில்தார் ராஜேஸ்வரியை அணுகியபோது அவர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பரிமளா கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை தாசில்தாரிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.
கீழ்கோத்தகிரி ஐயப்பன் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மக்களோடு முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் கே.ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 1350 வீடுகள் கட்டப்படும். பழங்குடி மக்களுக்கு 350 வீடுகள் வழங்கப்படும். தேனாடு, கெங்கரை, கோடநாடு குஞ்சப்பனை, நடுஹட்டி, நெடுகுளா உள்பட ஊராட்சி பகுதிகளில் 275 வீடுகள் வழங்கப்படும் என்றார்.
கோத்தகிரியில் உள்ள கீழ்கோத்தகிரி ஐயப்பன் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் மனைப்பட்டா, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு கொடுக்கப்பட்ட 450 மனுக்கள் ஒவ்வொரு துறையாக கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து பிரித்து அனுப்பும் பணிகளை அமைச்சர் கே. ராமச்சந்திரன் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.