India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இன்று திமுக உதகை நகர செயலாளர் ஜார்ஜ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், திமுக நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு. முபாரக், ரவிக்குமார், நெல்லை கண்ணன், எக்ஸ்போர்ட் செந்தில் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் உட்லாண்ஸ் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.3.53 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணைகளை இன்று வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தின் அநேக இடங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடானது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் உட்லண்ட்ஸ் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கூடுதல் ஆட்சியர் கௌஷிக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு துணை தலைவர் ஜே.கமல் அயோத்தியில் தங்கி 15 நாட்கள் ராமர் கோயிலில் சேவை செய்ததை பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி கவுரவித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த ‘சைவ பெரும் எழுச்சி விழா’வில் ஜே.கமலை ஆன்மீக தலைவர்கள் பாராட்டி கவுரவித்தனர். இதற்கு நீலகிரி மாவட்டம், மண்டல் உள்ளிட்ட பாஜகவினர் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தேசிய தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ், அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நீலகிரி மாவட்ட அளவில் தொழிற் பழகுனர்களுக்கான, ‘பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை’ முகாம் நடக்க உள்ளது. குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்தக் கடன் உதவியை, பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் நீலகிரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று கொள்ளலாம். பயனாளிகள் அரசின் இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக காகித பை தினத்தை முன்னிட்டு, நேற்று குன்னுார் அருகே அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் சார்பில், ‘பிளாஸ்டிக்’ ஒழிப்பு மற்றும் காகித பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகித பைகள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், காகித பைகளால் சுற்றுச்சூழலுக்கான பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்கா சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் வரும், செப்., முதல் நவம்பர் வரை இரண்டாவது சீசன் துவங்க உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அதனை ஒட்டி பூங்காவை தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 1 தேர்வு இன்று நடைப்பெற்றது. இதில் தேர்வு எழுத 988 பேர் விண்ணப்பித்த நிலையில், 570 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மேலும், தேர்வு மையத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.