India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி ஆட்சியராக இருந்துவரும் மு.அருணா மாற்றப்பட்டுள்ளார். அவர் புதுக்கோட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நீலகிரி மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்துவரும் லக்ஷ்மி பாவ்யா தன்னீரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றாவாறு பொதுமக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரியில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இயற்கையில் சிறந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்ட உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் உதகை வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் அவலாஞ்சி சுற்றுலா மையம் மையத்துக்கு நாள்தோறும் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக அவலாஞ்சி சுற்றுலா மையம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி ஆட்சியர் அருணா விடுத்துள்ள அறிவிப்பில், உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனியார் துறை சார்பில் வருகிற 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற விரும்புபவர்கள் நேரிலோ அல்லது 0423-2444004 மற்றும் 7200019666 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு பயன் பெறலாம் என அறிவித்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று கனமழை தொடர்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நேற்று (ஜூலை 15) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 16 பேருக்கு ரூ 2.52 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிதர்ஷினி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி 1955ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்டது. பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரி உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கல்லூரிக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆவண காப்பகத்தின் இயக்குனர் வேணுகோபால் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி, உட்லண்ட்ஸ் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இன்று (ஜூலை) தொடங்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவினை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் ஆகியோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.