India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா கோத்தகிரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட செயலர் கே.ஜே.குமார், கோத்தகிரி மண்டல் தலைவர் ஆல்தொரை, கோத்தகிரி பொது செயலர் சந்திர மோகன், செயற்குழு உறுப்பினர் அன்பரசன், சி.பி.ராமசந்திர ரெட்டி பலர் பங்கேற்றனர்.

உதகை நகர பாஜக சார்பில்,முன்னாள் பாரதப் பிரதமரும், பொக்ரான் அணுகுண்டு ஏவுகணை நாயகனுமான, அடல் பிகாரி வாஜ்பாய் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு உதகை ஏ.டி.சி பாஜக அலுவலகம் முன்பாக இன்று மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் காலை 11:30 மணிக்கு அட்டல் பிகாரி வாஜ்பாயின் படத்திற்கு மாலை அணிவித்து 100வதுபிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக முகநூல் பக்கத்தில் நீலகிரியில் நடைபெறும் காவல்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இடம்பெறும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துகளை முகநூல் பக்கத்தில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது.

2024-25ஆம் ஆண்டுக்கான அரசு வேளாண் நிதியில் இருந்து கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் டில்லர் மற்றும் களை எடுக்கும் கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆதி திராவிடர் பிரிவி சார்ந்த விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் உதவிடும் வகையில் மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கோத்தகிரி ஜமாத் சார்பாக பாவா சிக்கந்தர் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை நீலகிரி ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுரேஷ் கண்ணன் உடன் இருந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு வராமல் பல கோடி ரூபாயில் மாற்றுப்பாதை தயாராகி செயல்பட்டும் வருகிறது. இந்நிலையில் உதகை நகருக்குள் வராமல் கூடலூர் செல்லும் வாகனங்கள் நகரின் நுழைவு பகுதியான லவ்டேல் – மஞ்சனக்கொரை -மு பாலாடா- பெர்ன்ஹில் -பிங்கர் போஸ்ட் வழியாக கூடலூர் சாலையை வந்தடையும் திட்டம் ரூ 81 கோடி செலவில் வரும் புத்தாண்டு முதல் பணிகள் துவங்கப்பட உள்ளது. இதனால் நகரில் வாகன நெரிசல் குறையும்.

ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். பெண் மற்றும் ஆண் காவலர்கள் நடத்திய அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள், உடை மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்தார். இதர பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து இன்றுமுதல் 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி.

1.நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
2.50 சவரன் தங்க நகை திருடிய நால்வர் கைது
3.கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய அரசு கொறடா
4.திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வினாடி – வினா நிகழ்ச்சி
5.நீலகிரி யானை வழித்தடம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

நீலகிரி யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவா கன்னா அமர்வு, 2020 இல் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது என உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.