Thenilgiris

News August 3, 2024

ஊட்டிக்கு புதிய ஆணையர் நியமனம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பணி புரிந்து வந்த ஆணையர் எகராஜ் தேனி மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றதை அடுத்து புதிய ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட ஜஹாங்கிர் பாஷா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இவரை நகராட்சி அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News August 3, 2024

நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழைபாதிப்புக்கு 24 மணிநேரமும் செயல்படும் 0423-2444111, 9498101206, 9789800199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறையினர் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலம் தெரிவித்துள்ளனர்.

News August 3, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 05.08.2024 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 3, 2024

தயார் நிலையில் மீட்பு குழுவினர் – நீலகிரி எஸ்பி தகவல் 

image

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், பருவ மழை பாதிப்பை எதிர் கொள்ளும் வகையில், ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் பயிற்சி பெற்ற 10 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் 0423 2444111 என்ற எண்ணை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 3, 2024

வயநாடு நிலச்சரிவு: 31 மணி நேரத்தில் உருவான பாலம் 

image

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பாதிக்கப்பட்ட சூரல் மலை – முண்டகை இடையே 85 அடி நீள தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பலமானது, இந்திய ராணுவத்தின் வெல்லிங்டன் (நீலகிரி) மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பெண் மேஜர் ‘சீதா ஷெல்கே ‘  தலைமையில் 31 மணி நேரத்தில் இன்ஜினியரிங் வீரர்கள் கட்டி முடித்துள்ளனர்.

News August 3, 2024

நீலகிரி: மாணவர்களுக்கு ரூ.28 கோடி கல்விக் கடன்

image

உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கல்விக் கடன் வழங்குவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நீலகிரி மாவட்டத்தில் 2024-2025 கல்வியாண்டில் 2,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 28 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கல்விக் கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

News August 3, 2024

நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது. இந்நிலையில், இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

News August 3, 2024

நீலகிரியில் பூண்டு அறுவடை அமோகம் 

image

நீலகிரியில் உள்ள எம்.பாலாடா, ஓர நள்ளி, கொல்லி மலை, கடநாடு, கட்டபெட்டு, பில்லி கம்பை, பன ஹட்டி, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளை பூண்டுகளை பயிரிட்ட விவசாயிகள், அதனை அறுவடை செய்து மேட்டுபாளையம் மற்றும் ஊட்டி மண்டிகளுக்கு அனுப்புவதில் வேகம் காட்டி வருகின்றனர்.

News August 3, 2024

நீலகிரி பெண் செவிலியருக்கு குவியும் பாராட்டு

image

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக எதிர் திசையில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பெண் செவிலியர் சபீனா என்பவர் ராணுவத்தினர் அமைத்த ஜிப்லைனில் தொங்கியபடி அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். இவரின் செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News August 2, 2024

நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

image

வயநாடு  நிலச்சரிவு போன்று நீலகிரியில் ஏற்பட உள்ளது என்று சமூக வலை தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பி வருகிற நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்பி அச்சம் அடைய வேண்டாம் . மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்தார்.

error: Content is protected !!