India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டியில் நடிகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிக்க ரஷ்யாவில் இருந்து 115 பேர் உதகை ஓட்டலில் தங்கியுள்ளனர். சுற்றுலா விசாவில் வந்து படத்தில் நடிக்க கூடாது என்பதாலும், அவர்கள் பற்றி போலீசுக்கு தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட தனிபிரிவு போலீசார் தங்கும் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கி, விசாரித்து வருகின்றனர்.
நீலகிரியில் கடந்த 42 மாதங்களில் 2958 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரம் தமிழகத்தில் குறைந்தபட்ச கருக்கலைப்பு விவரமாகும்.
நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிக கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கோதகிரியில் தாழ்வாக இருந்த உயர் மின்கம்பியில் உரசி அரசு பேருந்து ஓடுநர் உயிரிழப்பு. உதகையில் தாழ்வாக உயர் மின்அழுத்த கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அதிக மேகமூட்டம் காரணமாக கீழ் இருந்த மின்கம்பி தெரியாமல் இருந்ததால் அதின் மேல் நின்ற ஓட்டுநர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டு பலியாகினார்.
வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வரும் உல்லாச பயணிகளை குஷி படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் மலை ரயில் இயக்கபடுகிறது. இந்த வகையில் (16 ம் தேதி, 17ம் தேதி) ஆகிய தேதிகளிலும், வருகிற (25ம் தேதியும்) ஆக 3 நாட்கள் குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்க படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.
வயநாடு நிலச்சரிவில் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ளவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நீலகிரியை சேர்ந்த செவிலியர் சபினா, மரத்தில் கயிற்றை கட்டி அதை பிடித்தபடி சென்று சிகிச்சை அளித்தார். இதை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இவருக்கு கல்பனா சாவ்லா விருது மற்றும் ரூ.5 லட்சம் காசோலையை இன்று வழங்கினார்.
உதகை அரசு கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூடலூர் அருகே அத்திபாளி பகுதியில் தனியார் தோட்டத்தில் 7 வயது பெண் சிறுத்தை இறந்து கிடப்பதாக நேற்று வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு சென்று ஆய்வு செய்தார். பின்னர், கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் பிரேத பரிசோதனை செய்தார். இறந்ததற்கான காரணம் ஆய்வக அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என்றனர்.
நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த சுந்தரவடிவேலு மாற்றலாகி சென்னை சென்றார். அவருக்கு பதிலாக நீலகிரி காவல் கண்காணிப்பாளராக நிஷா இன்று பதவி ஏற்றார். பின்னர் அவர் கூறுகையில், ‘நீலகிரி மாவட்ட எல்லையில் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணைவதால் பாதுகாப்பு கருதி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரமாக்கப்படும்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.