India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி மாநில அளவிலான விருதினை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பெற விரும்பும் நபர்கள் வரும் பிப்.18ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.1 லட்சம் காசோலை (ம) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

உதகையில் நேற்று திடீரென மூடுபனியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் நிலவிய கடும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. சாரல் மழையுடன் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

கோத்தகிரி அருகே உள்ள பில்லி கம்பை கிராமத்தை சேர்ந்த தன்ராஜ் (50 சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்த்ததில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தன்ராஜின் தாய் மிச்சியம்மாள் சோகம் தாளாமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி அலுவலகம் ஆடாசோலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின் மக்களின் மனுக்கள் குறித்த குறைகளை கேட்டு அறிந்து, விரைவில் மனுக்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு அவர்களின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி அண்ணா விருது வழங்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் பா. சுரேஷ், செ. செந்தில்குமார் மற்றும் வாகன ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவர்களின் துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
Sorry, no posts matched your criteria.