India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது ரன்னிமேடு ரயில் நிலையம். ஆனால் இந்த ரயில் நிலையம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், சோலை நடுவே அமைந்துள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று, நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை குழுவினர் நேற்று ரயில்வே வாரிய ஹெரிடேஜ் செயல் இயக்குநர் ஆஷிமா மெஹரோத்ராவிடம் வலியுறுத்தினர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடிகர் சூர்யா பட படப்பிடிப்பிற்காக, ரஷ்ய நடிகர்கள் தங்கிய விவரம் தெரிவிக்காத விடுதியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, வெளிநாட்டவர் தங்கும் விவரங்களை போலீசுக்கு தெரிவிக்காத ஓட்டல் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
நீலகிரி: பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனை சாவடி அருகே வன நிலத்தை சந்தோஷ் என்பவர் ஆக்கிரமித்து ஓட்டல் கட்டி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வன நிலத்தில் கட்டிடம் கட்டியது தவறு என்றும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பேரில், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகளுடன் நேற்று சென்று ஆக்கிரமிப்புக் கடையை அகற்றினர்.
குன்னூர் அருகே கொலக்கம்பை கோட்டக்கல் எஸ்டேட் உள்ளது. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக தொழிலாளர்கள் நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து, கொலக்கம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வரும் நடிகர் சூர்யா படப்பிடிப்பில் நடிப்பதற்காக, 115 ரஷ்யா துணை நடிகர்கள் வந்து தங்கி இருந்தனர். இவர்கள் குறித்து விடுதி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால், எஸ்பி அலுவலகத்திற்கு முறையான தகவல் கொடுக்காததைக் குறித்து விளக்கம் அளிக்குமாறு போலீசார் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கினர். இதைத் தொடர்ந்து நேற்று ரஷ்ய நடிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் ஆ. சபீனா அவர்களுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் சபீனா நேரில் வாழ்த்து பெற்றார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கூட்டாடா அருகே கோவில் மட்டம் பகுதியில் அரசு பேருந்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசிய விபத்தில், பேருந்து ஓட்டுனர் பிரதாப் (42) உயிரிழந்தார். இந்நிலையில், பிரதாப் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்திரவிட்டுள்ளார்.
கக்குச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது தீனட்டி கிராமம். அழகு நிறைந்த இந்த கிராமத்தில் சைவ உணவை மட்டுமே கிராம மக்கள் காலம் காலமாக சாப்பிட்டு வருகின்றனர். அசைவ உணவுகளை முற்றிலும் புறக்கணித்து வருவதாகவும் கூறுகின்றனர். பழங்காலம் முதல் இன்றுவரை கிராமத்தில் உள்ள இளைஞர்களும் சைவ உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்து வருகிறார்களாம்.
Sorry, no posts matched your criteria.