India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளா, காசர்கோடு பகுதியை சேர்ந்த யாசர் அப்துல்லா அகமத் (51), தனது மனைவி குழந்தைகளுடன் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். தலைகுந்தா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர மண் திட்டில் ஏறிய கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுமந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நீலகிரியில் மழை பெய்து வருவதாலும், வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளா பயணிகள் வருகை குறைந்ததாலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அமைந்துள்ள படகு இல்ல ஏரிக்கு, படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வராததால் ஏரி வெறிச்சோடி காணப்படுகிறது.
கூடலூர், பிதிர்காடு, நெலாக்கோட்டை அருகே வன ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றபோது 2 புலிகள் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்தனர். இதை 3 கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் புலிகள் அதே பகுதியில் எரியூட்டப்பட்டன. மேலும் அதே பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிந்தது. புலியும் விஷத்தில் பலியா? எனத் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோத்தகிரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மாமரம் எஸ்டேட். அதன் அருகே காட்டு பகுதியில் உள்ள வெள்ளரி கொம்பை, சுண்டப்பட்டியை சேர்ந்த ஆதிவாசி பெண் ஜானகி (65) இன்று மாலை யானை மிதித்து பலியானதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் வனத்துறை, வருவாய்துறை, காவல் துறையினர் அங்கு விரைந்து உள்ளனர்.
நீலகிரி, ‘மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான’ மலை ரயில் சேவை ஆக.22ம் தேதி வரை ரத்து என்று ரயில்வே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (20.8.24) தொடர் சீரமைப்பு பணி காரணமாக மலை ரயில் போக்குவரத்து ரத்து மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக.25 வரை சேவை இருக்காது என ரயில்வே அறிவித்து உள்ளது.
நீலகிரி, பிதர்காடு வனப்பகுதி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 புலிகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 புலிகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா இன்று கோத்தகிரி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி கூறும் கூட்டங்களில் பங்கேற்க வருகிறார். இந்த நிலையில், கோவை மருத்துவமனையில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வரும், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஸை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
நீலகிரி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கரூர் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 62 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வானவர்கள் விவரங்கள்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை இன்று (20.08.2024) முதல் 3 நாட்கள் மூடப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி பகுதியில் 6 புதிய பகுதி நேர ரேஷன் கடைகளும், கூடலூரில் 2 கடைகளும், குன்னூர் பகுதியில் 7 கடைகளும் என மொத்தம் 15 பகுதி நேர நியாய கடைகள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று குன்னூரில் தெரிவித்தார். அப்போது மாவட்ட கூடுதல் ஆட்சியர் கவுசிக் உடனிருந்தார்.
Sorry, no posts matched your criteria.