Thenilgiris

News November 13, 2024

நீலகிரி: ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் !

image

நீலகிரி, ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு திட்டத்தின் முதற்கட்ட தடுப்பூசி முகாம் 11.11.2024 முதல் 10.12.2024 வரை நடைபெற உள்ளது. இந்த வைரஸ் நோய் செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டுகளை பாதிக்கக்கூடியது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் ஒரு வாரத்தில் இறக்கும் வாய்ப்புள்ளது.எனவே நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர்,கோத்தகிரி,பந்தலூர் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனையில் முகாம் நடைபெற உள்ளது.

News November 13, 2024

நிதி முறைக்கேடு புகார் விசாரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை

image

கூடலூர் மன்வயல் பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், கூடலூர் நகராட்சியில் 2022 முதல் 2025 வருடம் வரை சுமார் ஆறுகோடி ரூபாய் பொதுநிதியில் நடைபெற்ற அனைத்து பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் ஊழல் தடுப்புத்துறை மூலம் விசாரனை நடத்தவேண்டும் என இன்று நேரில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படடது.

News November 13, 2024

டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – எல்.முருகன் கண்டனம்

image

நீலகிரியில் டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தைக்கு சிகிச்சை செய்த அரசு மருத்துவமனையை கண்டித்து எல்.முருகன் X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது திமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு மருத்துவமனை எந்த அவலத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. நிர்வாக திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே இந்த அரசு கவனம் செலுத்துகிறது, என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டம் தெரிவித்துள்ளனர்.

News November 13, 2024

தேசிய தொடர் ஓட்டப்போட்டிக்கு குன்னூர் மாணவன் தேர்வு

image

65வது குடியரசுதின மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி பூங்கா SADT மைதானத்தில் 6 முதல் 11ந் தேதி வரை நடைப்பெற்றது. இங்கு போட்டியில் பங்கேற்ற குன்னூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி மாணவன் பிரெட்ரிக் ஜோஸ் தலைமையிலான அணி 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றது. தேசிய அளவிலான தொடர் ஓட்டப்போட்டிக்கு பிரெட்ரிக் ஜோஸ் தேர்வானதாக இன்று அறிவிப்பால் பள்ளியே மகிழ்ச்சி.

News November 13, 2024

நீலகிரி வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம்

image

உதகை ஆட்சியரகத்தில் நீலகிரி வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் தலைமையில், ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் பேசும்போது, 2025 ஜனவரி 12ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கலாம் என்றார்.

News November 13, 2024

ரத்ததான முகாம் நடத்தியவர்களுக்கு பாராட்டு

image

ஊட்டியில் தன்னார்வ ரத்ததான முகாம்களை சிறப்பாக நடத்தி, தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் அளித்த 20 ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இதை நீவகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி பங்கேற்றனர்.

News November 13, 2024

நீலகிரியில் 50,000 வீடுகளுக்கு இனி நிரந்தர தீர்வு

image

குன்னூர் சிம்ஸ்பூங்கா பகுதியில் துணைமின் நிலையம் புதிதாக அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்துவந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்துவருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.12.6 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு பணிகள் முடிந்தால் குன்னூர் நகரில் 50 ஆயிரம் வீடுகளில் குறைந்த மின்அழுத்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

News November 12, 2024

நீலகிரி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை சார்பில் நாள்தோறும் காவல் அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News November 12, 2024

நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤உதகை: நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் ➤உதகை: நகராட்சி மீது புகார் ➤குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத் தூள் தேக்கம் ➤சோதனை சாவடிகளில் தானியங்கி கேமராக்கள் ➤போக்சோவில் குஜராத் வாலிபர் கைது ➤நீலகிரியில் பாஸ்டேக் முறை: கலெக்டர் அறிவிப்பு ➤நீலகிரியில் 5 மதுக் கடைகள் மூடல்.

News November 12, 2024

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத் தூள் தேக்கம்

image

குன்னூரில் உள்ள ஏல மையத்தில் நடந்த 45-வது ஏலத்தில் 31.60 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 15 லட்சத்து 23 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் மட்டுமே விற்பனையானது. 16 லட்சத்து 37 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளது. இதனால் ரூ.22 கோடி 43 லட்சம் மதிப்பிலான தேயிலைக் கொண்ட மூட்டைகள் குடோனில் தேக்கமடைந்து இருக்கிறது.

error: Content is protected !!