India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் ,குன்னூரில் புதிய நீதிமன்றம் அமைக்க அரசின் மூலம் சுமார் 8 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் குன்னூர் நீதிமன்ற நீதிபதிகள், தாசில்தார், குன்னூர் கூடுதல் ஆட்சியர் ஆகியோர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேரில் ஆய்வு செய்தனர். இவர்களுடன் வனத்துறை அதிகாரிகள், நில அளவை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. வனவிலங்குகளை வேட்டையாட தனது பணியாளர்களுக்கு கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சஞ்சீவன் சேர்க்கப்பட்டதால் கடந்த ஏப்ரலில் அவர் துபாய்க்கு தப்பி சென்று தலைமறைவானார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்பதால், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இன்று நெல்லியாளம் நகராட்சியில் நடந்த சோதனையில், கணக்கில் வராத பணம் ரூபாய் 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) இல்லாத மாவட்டமாக நீலகிரி திகழ்வதாக கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உதகையில் வாகன நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, நகர பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். வரும் நவ.1ஆம் தேதி முதல் உதகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்
தமிழ்நாடு மலையேற்ற வழித்தடங்களில் நீலகிரி மாவட்டத்தில் 11 இடங்கள் தேர்வு செய்து இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கேர்ன்ஹில், லாங்வுட்சோலை, ஜீன்பூல், ரங்கசாமி சிகரம், போரிசிகரம், முக்குருத்தி, அவலாஞ்சி, அவலாஞ்சி சோலை, கோலாரிபெட்டா, தேவர்பெட்டா, நீடில்ராக் ஆகிய 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் நுழைந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை குன்னூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த காட்டொருமையால், அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். மேலும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகை நகராட்சியின் 3 மற்றும் 4 வார்டுகளை உள்ளடக்கிய வண்டிசோலை, சர்ச் ஹில் பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய படுகிறது. இந்த நிலையில், தற்போதைய மழையால் மார்லிமந்து அணையில் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடியில் தற்போது 20 அடிவரை நீர் இருப்பு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜாதி வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர், ஆதிதிராவிடர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர்கள் – 18002021989 & 14566 என்ற இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3ஆம் வார்டு மற்றும் 10ஆம் வார்டுக்குட்பட்ட பகுதிகளில், புதிதாக சாலை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சாலை அப்பகுதி மக்களின் பட்டா நிலங்களின் வழியாக செல்ல உள்ளதால், அப்பகுதி மக்கள் சாலை அமைப்பதற்காக தங்களது நிலத்தினை வழங்கினார்கள். அதற்கான ஆவணங்களை வார்டு உறுப்பினர்கள் எமி போல், ரம்சீனா ஆகியோர் தலைவர் வள்ளியிடம் வழங்கினார்கள்.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் அனுபோக சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற, இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு கொடுப்பதாக, நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் நுழைந்து, சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.