India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான நல வாரியம் மூலம் சுயதொழில் துவங்க கடனுதவி, 40 வயதிற்கு மேல் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நல வாரியத்தில் 125 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் 25 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இந்த நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் 2,151 மாணவிகள், தமிழ்புதல்வன் திட்டத்தில் 4,091 மாணவர்கள் பயனடைந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் 100-ஆவது நடைப்பயிற்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடைப்பயிற்சி தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
மீனவா் நலத் துறை, அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் சார்பில், இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வு எழுதுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் இது குறித்த விவரத்தை வைகை அணை, மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்: 04546-291891-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று 31.10.2024 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (31.10.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே காமக்காப்பட்டி பகுதியில் வைகை அணை பின்புறம் நீர் பகுதியில் குளிக்க சென்று இளைஞர் நேரில் மூழ்கியதால் தகவலைத்தொடர்ந்து பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் இளைஞரின் உடலை வைகை அணை பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் தற்போது மழை பெய்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் நீரில் மூழ்கிய இளைஞரை உடலை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லக்கூடிய தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் பகல் 12.15 மணியிலிருந்து இல்லாத நிலையில் பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகள் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். பின் ஓரிரு பஸ் வர வர கூட்டம் அலைமோதியது. பண்டிகை கால நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கினால் என்ன? பயணிகள் கேட்க தொடங்கினர்.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.
SHARE IT!
தேனி மாவட்டத்தில் இன்று 30.10.2024 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி தேவையுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.