Theni

News January 15, 2025

ஆதிதிராவிடர் மக்கள் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயம் பொருளாதாரம் மேம்பாட்டுக்காக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு தொகை ரூ.3.50 லட்சம். அந்த தொகையை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் 6% வட்டி மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். (பயனுள்ளவர்களுக்கு பகிருங்கள்)

News January 15, 2025

தாட்கோ மூலம் பயிற்சி – கலெக்டர் தகவல்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. மேலும் மாவட்ட மேலாளர் அறை எண்.73, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி அவர்களை நேரிலோ அல்லது 04546 260995 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

News January 15, 2025

தேனியில் உழவு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் அலைபேசி மூலம் மின்மோட்டர் இயக்குதல்,பழைய மின்மோட்டார்களை புதுப்பித்தல் செய்ய மானியம் வழங்கப்படுகிறது.அதே போல் தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய உழவு மானியம் 1 ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்படுகிறது.1 விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை விண்ணப்பிக்கலாம்.விருப்பம் உள்ளவர்கள் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2025

தேனியில் 40 மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி

image

தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சிலரை தேர்வு செய்து நீட் தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக 8 வட்டாரங்களிலும் தலா 5 மாணவர்கள் தேர்வு செய்யும் பணியை கல்வித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 40 மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 15, 2025

தேனீக்கள் கொட்டி 30க்கும் மேற்பட்டோர் காயம்

image

சுருளிப்பட்டியை சேர்ந்த சில குடும்பத்தினர் கருநாக்கமுத்தன்பட்டி விலக்கில் உள்ள கோயில் ஒன்றில் தை முதல் நாளில் நேற்று (ஜன.14) பொங்கல் வைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, புளியந்தோப்பில் இருந்த தேன் கூட்டை பறவை ஒன்று கொத்தியதால் கூடு கலைந்து தேனீக்கள் வெளியேறி அருகில் இருந்த அவர்களை கொட்டியது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News January 15, 2025

பொங்கல் வைத்து வழிபாடு செய்த போடி எம்எல்ஏ

image

இன்று தை திருநாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் தனது வீட்டில் பொங்கல் வைத்து சாமிக்கு படையல் இட்டு தனது குடும்பத்தினருடன் சாமி வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News January 15, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 14.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2025

தேனி எம்.பி. பொங்கல் வாழ்த்து

image

அனைத்து பகுதிகளிலும் இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் இருள் விலகி தங்களது வாழ்வில் வெற்றி சூரியன் உதித்திட அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தனது தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News January 14, 2025

இந்த பொங்கலை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்களின் பொங்கல் கொண்டாட்டத்தை way2news-ல் பதிவிடலாம். இந்த தை பொங்கலுக்கு உங்கள் வீட்டில் அலங்கரித்து வைக்கப்படும் பொங்கல் பானையைப் புகைப்படம் எடுத்து, உங்களின் பெயர், ஊர், மாவட்டம் ஆகியவற்றைப் பதிவிட்டு நமது way2news app மூலம் அனுப்பலாம். இதை எப்படி பதிவிடலாம் என்பதை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. way2news-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

News January 14, 2025

விமானப்படை மருத்துவ உதவியாளர் தேர்வு அறிவிப்பு

image

இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் மருத்துவ உதவியாளர் (Medical Assistant) தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளர் (பொது) விண்ணப்பதாரர்களுக்கு 29.01.2025 அன்றும், மருத்துவ உதவியாளர் (மருந்தாளர்) விண்ணப்பதாரர்களுக்கு 04.02.2025 அன்றும் தேர்வு நடைபெறும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று (ஜன.13) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!