India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திராட்சைக்கு உரிய விலை உள்ளூர் திராட்சை கொள்முதல்,விலையேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். உள்ளூர் திராட்சை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள்.வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் என்று ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்னாபுரம் கார்த்திக். இவர், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தில் இணைந்து 2011ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார். தமிழ்நாட்டில் பல குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக இவர் மீது கொச்சி தேசிய புலனாய்வு முகமையில் (NIA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை இன்று தமிழ்நாடு க்யூ பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஆண்டிபட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி தன்யா, கருணாநிதி, விஜயலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் மொத்தம் ரூ.39.40 லட்சம் மோசடி செய்ததாக தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி மாவட்ட குற்ற பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீதும் நேற்று (பிப்.22) வழக்கு பதிவு செய்து விசாரணை.
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தோட்டக்கலைப் பயிர்கள், மலைப் பயிர்கள் மேலாண்மை முறைகள் பற்றிய சிறப்பு ஒரு நாள் இலவச பயிற்சி (பிப்.28) அன்று காலை 09.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. வல்லுனர்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் ,தொழில்முனைவோர் 9444781202 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
தேனி மாவட்டத்தில் இன்று 22.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து 15கி.மீ தொலைவில், மேகமலை பகுதியில் இருந்து உருவாகும் சின்ன சுருளி உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாமல் இயற்கை அழகை ரசித்தவாறே இந்த அருவியில் குளித்து மகிழலாம் .
பொம்மையக்கவுண்டன்பட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு கன்னிமார்கோயில் பெரிய வாய்க்கால் பாதையில் உள்ளது. நேற்று காலை தோப்பில் முருகேசன் தோட்ட வேலைக்காாக சென்றார். நிலத்தில் சிறுத்தையின் கால்தடங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உயிர்தேசம் நடக்கும் முன் வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று 21.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
போடிநாயக்கனூர் பகுதியில்
அமைந்துள்ளது. கைலாய கீழச்சொக்கநாதர் ஆலயம்.
காலகஸ்தி போன்று அருகில் நீர்நிலை உடன் வாஸ்து முறைப்படி
வாயு மூலையில் உள்ள இந்த கோவிலை
5 தலை நாகம் ஒன்று பாதுகாத்து வருவதாக
ஊர் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அக்காலம் தொட்டு இக்காலம் வரை 5 தலை நாகம்
ஒன்று இந்த ஆலயத்தை காவல் காத்து வந்ததுள்ளதாகவும்,
அந்த நாகம் தற்போதும் உள்ளதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வருகின்ற 28.02.2025 தேதி இலவச மிஷன் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலுக்கு 9500314193, 9043651202, 04546_251578 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.