Theni

News January 25, 2025

தேனி மக்களே உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தேனி மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

News January 25, 2025

அரசுக்கு கோரிக்கை விடுத்த ஓபிஎஸ்

image

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ முன்னாள் முதல்வரும் தேனி மாவட்டம் போடி எம்எல்ஏ வுமான ஓ.பன்னீர் செல்வம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாலுமி இல்லாத கப்பல் போல தலைமை ஆசிரியர்கள் இல்லாத அரசுப் பள்ளிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

புகழாரம் சூட்டிய தேனி எம்.பி தங்க தமிழ் செல்வன்

image

தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும் தேனி மாவட்ட பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு என்று தாய்மொழிக்காக தன்னுயிர் நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கு எனது வீரவணக்கம்! என புகழாரம் சூட்டினார். மேலும் தமிழ் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 25, 2025

சுவாமி சிலை பேசும் எனக் கூறி மோசடி

image

தேனியை சேர்ந்த ஆண்டவர் தன்னிடம் தங்கமணி, பாலமுருகன், சம்பழகு, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 நபர்கள் சேர்ந்து தங்களிடம் ஒரு சுவாமி சிலை உள்ளதாகவும் அந்த சுவாமி சிலைக்கு பூஜை செய்தால் அச்சிலை பேசும், செல்வம் பெருகும் எனக்கூறி உலோக சிலையை ரூ.1 கோடிக்கு விலை பேசி ரூ.5,000 முன்பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளித்தார். மோசடியில் ஈடுபட்ட 6 பேரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (ஜன.24) கைது செய்தனர்

News January 25, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 24.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 25, 2025

தேனி மாவட்டத்தில் உரம் இருப்பு நிலவரம்

image

தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,609 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 645 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 1,761 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 1.675 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கிறது.

News January 25, 2025

தேனி மாவட்டத்தில் விதை பயிர்கள் இருப்பு விபரம்

image

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 171.5 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் விதை 4.82 மெ.டன்னும் சிறுதானியங்கள் 3.70 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, மற்றும் உளுந்து) 12.6 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடலை) 5.9 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

News January 24, 2025

தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் 2025 -2026 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான அங்கீகாரம் பெற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

இளைஞரை தீ வைத்து எரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

வருசநாடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரை கடந்த 11ஆம் தேதி ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. அவரை மீட்டு தேனி க.விலக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அதே ஊரைச்சேர்ந்த மலைச்சாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் சிங்கராஜபுரம் கிராமம் வேலு மகன் குமார் என்பவரை கைது செய்தனர்.

News January 24, 2025

இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

image

போடியை சேர்ந்தவர் வர்ஷாஸ்ரீ (19). இவர் கல்லூரிக்கு சென்ற வந்த நிலையில் படிப்பு சரிவராத காரணத்தினால் பொங்கலுக்கு பின் கல்லூரி செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்த நிலையில் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக வர்ஷா ஸ்ரீ நேற்று (ஜன.23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள் இதுகுறித்து போடி போலீசார் விசாரணை.

error: Content is protected !!