Theni

News January 29, 2025

தேனியில் மீண்டும் மக்களுடன் முதல்வர் முகாம்

image

தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இந்நிலையில் மீண்டும் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. மாவட்டத்தில் பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் பின்தங்கிய பகுதிகள், மலை கிராமங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் மட்டும் முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 29, 2025

கலைஞர் கனவு இல்ல திட்டம்: 1300 பேருக்கு வீடுகள்

image

கலைஞர் கனவு இல்ல திட்டம் பயனாளிகளுக்கு அரசு தலா ரூ.3.50 லட்சம் இலவசமாக வழங்குகிறது. தேனியில் கடந்தாண்டு இத்திட்டத்தில் 961 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுவருகிறது. அடுத்த நிதியாண்டிற்கு 1300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய விபரங்கள் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

News January 28, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 28.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 28, 2025

சாப்பிடும் போது புறையேறி இளைஞர் உயிரிழப்பு

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (24). இவர் நேற்று முன் தினம் (ஜன.26) இரவு அவரது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென தொண்டையில் புறையேறிக் கொண்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அஜய் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் நேற்று (ஜன.27) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 28, 2025

கூடலூர் அருகே விவசாயியை தாக்கிய கரடி

image

தேனிகூடலூர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் பெருமாள் கோவில் புலத்தில் இலவ மரங்களை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் ராமருடன் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, புதருக்குள் மறைந்திருந்த கரடி கோபாலை தாக்கியது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து விவசாயிகள் கரடியை விரட்டினர். கோபால் படுகாயம் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 28, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 27, 2025

விதி மீறிய 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தலைமையில் தேனியில் உள்ள கடைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜன.26ல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடந்தது. விதிமுறைகளை பின்பற்றாத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News January 26, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 26, 2025

குடியரசு வாழ்த்து தெரிவித்த தேனி எம்.பி தங்க தமிழ் செல்வன்

image

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அனைவருக்கும் இனிய 76 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News January 26, 2025

ஆண்டிபட்டியில் ரம்மி விளையாடி கடன் பெற்ற இளைஞர் தற்கொலை

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி பல்வேறு நபர்களிடம் கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையால் ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கணபதி வயது 25 என்பவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார.இது குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!