India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க

மயிலாடும்பாறை பகுதியை சோ்ந்தவா் குலசேகரபாண்டியன் (67). ஓய்வு பெற்ற தனியாா் பள்ளியில் ஆசிரியரான இவரின் மகள், குடும்ப பிரச்னையில் அவரது கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் தங்கி வருகிறாா். தனது மகளின் குடும்பப் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த குலசேகரபாண்டியன் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு (செப்.20) பதிவு செய்து விசாரணை.

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு வருகிற அக்.15-ம் தேதி துவங்க உள்ளது. வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04546-244465, 9865191494 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளார்.

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கியாஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க

தேனி: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு அக்.11.ல் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.,27, அக்.,4ல் இலவச பயிற்சி வழங்க உள்ளது. விரும்புவோர் விண்ணப்ப நகல், போட்டோ சமர்ப்பித்து பயிற்சியில் பங்கேற்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

தேனி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – செப். 23 ஆகும். மேலும் விவரங்களுக்கு <

தேனி மாவட்டத்தில் இன்று 20.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்களில் விழுவதும், இடி மின்னலால் மின்மாற்றிகள் சேதமடையும் சம்பவங்களும் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற நேரங்களில் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களுடன் 9443111912 என்ற வாட்சப் எண்ணில், மின்வாரியத்தை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT

தேனி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <

தேனி மாவட்டம் தாட்கோ சாா்பில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழித் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற பி.எஸ்.சி நா்சிங், பொது நா்சிங், பட்டயப் படிப்பு, பி.இ மெக்கானிக்கல், பயோ மெடிக்கல், எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு 9445029480 எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் தகவல்.
Sorry, no posts matched your criteria.