Theni

News February 6, 2025

தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு

image

தேனியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பாலம் கட்டுவதற்கான கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால்
போடி, மூணார், உத்தமபாளையம்
கம்பம், குமுளி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பொது மக்கள் தேனி புதிய பேருந்து நிலையம் சென்று அங்கு இருந்து பயணிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

1.37 கோடி மோசடி வழக்கில் இடைத்தரகர் கைது

image

தேனி மாவட்டத்தில், 21 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.37 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மகாலட்சுமி, பாலமுருகன், நாகேந்திரகுமார் ஆகியோரை கடந்த நவம்பரில் கைது செய்தனர். விசாரணையில் கண்ணன் என்பவர் இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கண்ணனை நேற்று (பிப்.5) கைது செய்தனர்.

News February 6, 2025

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் கல்லுாரிகளில் மூன்றாமாண்டு இளநிலை படிப்பு, பாலிடெக்னிக்கின் முதுநிலை, அரசு ஒதுக்கீட்டில் தொழில்நுட்ப படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு http://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பிப்.,28 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.SHARE செய்யவும்.

News February 5, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 05.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 5, 2025

தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெண் தொழில் முனைவோர்க்கான சிறப்பு முகாம் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த பெண் தொழில் முனைவோர் சிறப்பு முகாமில் தேவையுடையவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News February 5, 2025

சிறைச் சாலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை காவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

News February 5, 2025

தேனியில் செய்முறைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு 

image

தேனி மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்குகிறது. இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 800 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் முதல்வாரத்தில் துவங்குகின்றன. மாவட்டத்தில் 140 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் 13,947 பேர், பிளஸ் 2 மாணவர்கள் 13,829 பேர் எழுத உள்ளனர்.

News February 5, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.05) நீர்மட்டம்: வைகை அணை: 65.06 (71) அடி, வரத்து: 230 க.அடி, திறப்பு: 519 க.அடி, பெரியாறு அணை: 119.95 (142) அடி, வரத்து: 117 க.அடி, திறப்பு: 556 க.அடி, மஞ்சளார் அணை: 44.40 (57) அடி, வரத்து: 23 க.அடி, திறப்பு: 75 க.அடி, சோத்துப்பாறை அணை: 103.48 (126.28) அடி, வரத்து: 6 க.அடி, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 36 (52.55) அடி, வரத்து: 4 க.அடி, திறப்பு: 14.47 க.அடி

News February 5, 2025

ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 2,957 விண்ணப்பங்கள் ஆய்வு

image

தேனி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 2,957 விண்ணப்பங்கள் ‘சூப்பர் செக்கிங்’ எனும் தீவிர சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. 2024 ஜூன் – நவம்பர் வரை 3000 ற்கும் அதிகமானோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர் விண்ணப்பங்களை தாலுகா அலுவலங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் சரிபார்த்தனர். தேனி 283, பெரியகுளம் 744, போடி 393, ஆண்டிபட்டி 748, உத்தமபாளையம் 789 என தேர்வாகி உள்ளது.

News February 5, 2025

உடல் நலக் குறைவால் தம்பதியினர் தற்கொலை

image

தேனி, கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவர் தீபிகா என்பவரை(30) கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மனோஜுக்கும், தீபிகாவுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த தம்பதியினர் நேற்று (பிப்-4)  வீட்டில் விஷம் குடித்தனா். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

error: Content is protected !!