Theni

News January 5, 2026

தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.05) திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதற்கேற்ப பணிகளை மாற்றியமைத்து கொள்ளுங்கள் SHARE IT..

News January 5, 2026

தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.05) திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதற்கேற்ப பணிகளை மாற்றியமைத்து கொள்ளுங்கள் SHARE IT..

News January 4, 2026

தேனி: பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>TN nilam citizen portal <<>>தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

தேனியில் இருந்து கூடுதலாக 60 பஸ்கள் இயக்கம்

image

அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.5) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்பியவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்ல வசதியாக தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக சென்னைக்கு 10, கோவைக்கு 20, மதுரைக்கு 10, திண்டுக்கலுக்கு 15, திருச்சிக்கு 5 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

தேனி: GOVT வேலைக்கு போகனுமா.? இது முக்கியம்.!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 4, 2026

தேனி: தோழி மகளிர் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் சமூக நலத்துறை சார்பில் ரூ.5.19 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதி அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. இந்த விடுதியில் தேனி மாவட்டத்திற்கு வெளியூரில் இருந்து பணிக்கு வந்துள்ள பெண்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இங்கு தங்கி பணிக்கு செல்ல விரும்பும் பெண்கள் 9499988009 என்ற எண்ணில் விவரங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

News January 4, 2026

தேனி: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

தேனி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 4, 2026

தேனி: கார் மோதி மூதாட்டி பலி

image

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் ராமாயி அம்மாள் (79). மாற்றுத்திறனாளியான இவா் நேற்று முன் தினம் வடகரை சாலையை கடக்க முயன்றாா். அப்போது எதிரே வந்த காா் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News January 4, 2026

தேனி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

image

வீரபாண்டி அருகே உள்ள பாலார்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். தினமும் இரவில் கோழிகளுக்கு தீவனம் வைத்து வீடு திரும்புவார். நேற்று முன்தினம் இரவு தீவனம் வைக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நேற்று (ஜன.3) அங்கு சென்று பார்த்த போது பிரபாகரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!