India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மதி சிறகுகள் தொழில் மையம் செயல்படுகிறது. இங்கு தொழில் கருத்துருவாக்கம், அரசுத்துறை திட்டங்கள், வங்கிகளில் இருந்து கடன் பெறுதல், வழிகாட்டுதல், சந்தை படுத்துதல், வணிக குறியீடு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இ-சேவை, ஜி.எஸ்.டி. சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டி போலீசார் கடந்த 26.8.24 அன்று திம்மரசநாயக்கனூர் அருகேயுள்ள காவல் சோதனை சாவடியில் வாகன தனிக்கையின் ஈடுபட்ட போது அனுமதியின்றி ஆற்று மணலை ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று திருமலாபுரத்தை சேர்ந்த சந்துரு (23), குன்னூர் கிருபாகரன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டத்தில் தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து தமிழக அரசின் சிறப்புத்திட்டமான தூய்மைப் பணியாளர்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டத்தில் 90% மானியத்துடன் கூடிய தலா ரூ.2.50 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெறுவதற்கான ஆணைகளை 12 பயனாளிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். உடன் தாட்கோ மேலாளர் சரளா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தேனியில் தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சின்னமனூர், தேனி ஆகிய பகுதிகளுக்கு முதன்மை குடிநீர் ஆதாரமாக விளங்கும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் இன்று அணை 1487 கனஅடியாக உயர்ந்துள்ளது. தேக்கிய நீரை தமிழக பகுதி குடிநீர் தேவைக்கு குழாய்கள் முலம் 14,700 ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆறுகள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வருகின்ற செப்.19 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி வட்ட சட்டப்பணி குழு தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதாக நீதித்துறை அறிவித்துள்ளது. அன்றைய நாள் பொதுமக்கள் நீதிமன்றத்தில் சென்று வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம் பகுதியில் இருந்து சுமார் 341 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில் தையல் இயந்திரம், வீட்டுமனை பட்டா, கல்விக் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்குமாறு மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி உள்ளனர்.

தேனி முழுவதும் சுமார் 800-க்கு மேற்பட்ட இடங்களில் உரிய அனுமதி பெற்று சிலைகள் வைக்க உள்ளன. இந்த சிலைகளை கரைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் 9 இடங்களில் தேர்வு செய்துள்ளது. தேனியில் முல்லை பெரியாறு பெரியகுளத்தில் வராகநதி, ஆண்டிபட்டி வைகை, வருசநாடு மூல வைகை ஆறு மற்றும் தட்டுப்பனை, போடி கொட்டகுடி ஆறு, மார்க்கையன்கோட்டை ஆறு, பாளையம் ஆறு, சுருளிபட்டி ஆறு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அரசால் திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்படவுள்ளது. விரும்புவோர் விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் கொடுக்கலாம். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு பாரட்டு சான்றிதழ், ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 91596 68240 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியை பெரியகுளம் அழகர்சாமி புரத்தை சேர்ந்த ஜெபி 22 பாலியல் வன்கொடுமை செய்தார் இதற்க்கு அவரது தாய் ஆதரவாக இருந்துள்ளார். மேலும் ஜெபி அவரது தாய் பாக்கியம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சிறுமியின் தாயாரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் மகன், தாய் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் தினமும் இரவில் போலீசார் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள், பாதுகாப்பு குறித்து இரவில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதில் பொதுமக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் காவல்துறையை அனுகுவதற்கு தினமும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று(செப்.1)ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.